News May 2, 2024

நயினார் நாகேந்திரன் உறவினர்களுக்கு சம்மன்

image

தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் பாஜக துணைத் தலைவர் நயினார் நாகேந்திரனின் உறவினர்கள் இருவருக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், அவரது உறவினர் முருகன் உள்பட இருவரும் இன்று காலை 11 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்த வழக்கு தொடர்பாக நவீன், பெருமாள், சதீஷ் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Similar News

News March 31, 2026

சுவாமி விவேகானந்தர் பொன்மொழிகள்

image

*பிறரது பாராட்டுக்கும் பழிக்கும் செவிசாய்த்தால் மகத்தான காரியம் எதையும் செய்ய முடியாது *பொய் சொல்லி தப்பிக்காதே; உண்மையை சொல்லி மாட்டிக்கொள். பொய் வாழ விடாது; உண்மை சாக விடாது *எந்த குடும்பத்தில் உள்ள பெண்மை கொண்டாடப் படவில்லையோ, அந்த வீடும் பாழ்; அந்த நாடும் பாழ் *இதயம் சொல்வதை செய் வெற்றியோ, தோல்வியோ அதை தாங்கும் சக்தி அதற்கு மட்டும் தான் உண்டு

News March 31, 2026

அதிமுகவை பாஜகவிடம் EPS விற்றுவிட்டார்: உதயநிதி

image

மத்திய அரசின் அடிமையாக EPS செயல்படுகிறார் என உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வந்தவாசியில் பிரசாரம் செய்த அவர், கடந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவுக்கு வாடகைக்கு விட்டிருந்த EPS, இந்த தேர்தலில் அதிமுகவை பாஜகவிடம் விற்பனை செய்துவிட்டதாக தெரிவித்தார். மேலும், அதிமுகவை அடிமைப்படுத்தி தமிழகத்தை ஆள நினைப்போரை விரட்டி அடிக்க வேண்டும் என வாக்காளர்களிடம் அவர் கேட்டுக் கொண்டார். <<-se>>#TNElection2026<<>>

News March 31, 2026

தேர்தலுக்கு பிறகு அதிமுக இருக்காது: நிர்மல் குமார்

image

தேர்தலுக்கு பிறகு அதிமுகவின் பொ.செ., ஆக EPS இருக்கமாட்டார் என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அதிமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது சமம் என்பதை மக்கள் புரிந்து கொண்டதால், எந்த தொகுதியிலும் அதிமுக வெற்றிபெறாது எனவும் கூறினார். ஏற்கெனவே, பாஜகவின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள அதிமுக, தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் இணைக்கப்பட்டு காணாமல் போய்விடும் என்றும் அவர் பேசியுள்ளார். <<-se>>#TNElection2026<<>>

error: Content is protected !!