News March 19, 2024

கார்த்தி சிதம்பரத்துக்கு சம்மன்

image

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்துக்கு டெல்லி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. 2011ல் உள்துறை அமைச்சராக ப. சிதம்பரம் இருந்த போது, 263 சீனர்களுக்கு விசா அளிக்கப்பட்டதில் மோசடி நடந்ததாக E.D. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் E.D. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, ஏப்.5ல் ஆஜராக கார்த்தி சிதம்பரத்துக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Similar News

News December 4, 2025

மோடி அரசே ரூபாய் மதிப்பு குறைவுக்கு காரணம்: கார்கே

image

மத்திய அரசின் கொள்கைகளே ரூபாயின் மதிப்பு குறைந்ததற்கு காரணம் என மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார். மோடி அரசின் திட்டங்கள் சரியானதாக இருந்தால் ரூபாயின் மதிப்பு சரிந்திருக்காது எனவும் அவர் சாடியுள்ளார். 2014-ல் குஜராத் CM-ஆக இருந்த மோடி, ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு காங்கிரஸை குற்றம்சாட்டியதை சுட்டிக்காட்டி, இப்போது நீங்கள்தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும் என PM-யிடம் கார்கே கேட்டுள்ளார்.

News December 4, 2025

சற்றுமுன்: Ex ஆளுநர் காலமானார்

image

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான சுஷ்மா ஸ்வராஜின் கணவர் ஸ்வராஜ் கவுஷல் (73) இன்று காலமானார். மூத்த வழக்கறிஞரான ஸ்வராஜ், மிசோரம் மாநில முன்னாள் கவர்னர் ஆவார். இவரது மறைவுக்கு பாஜக உள்பட பல கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஸ்வராஜ் கவுஷல், தனது கடின உழைப்பால் நாட்டிற்கு நிகரில்லா பணிகளை செய்துள்ளார் என பாஜக புகழஞ்சலி செலுத்தியுள்ளது.

News December 4, 2025

புடின் தங்கும் அரண்மனை பற்றி தெரியுமா?

image

2 நாள் பயணமாக இந்தியா வரும் புடின், டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் தங்குகிறார். தான் வாழ்ந்த காலத்தில் உலகின் பெரும் பணக்காரராக விளங்கிய ஐதராபாத்தின் கடைசி நிஜாம் ஒஸ்மான் அலி கான் கட்டிய அரண்மனைதான் இது. வண்ணத்துப்பூச்சியின் வடிவத்தில் 8.2 ஏக்கரில் கட்டப்பட்ட இந்த அரண்மனையின் தற்போதைய மதிப்பு ₹170 கோடிக்கும் அதிகமாகும். 36 அறைகள், செயற்கை நீருற்று என பல ஆடம்பர வசதிகள் இதில் உள்ளன.

error: Content is protected !!