News April 29, 2024

பிபிசிக்கு மீண்டும் சம்மன்

image

குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் வெளியிட்ட விவகாரத்தில், பிபிசிக்கு டெல்லி கோர்ட் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கடந்தாண்டு வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அந்நிறுவனம் மீது குஜராத் என்.ஜி.ஓ வழக்கு தொடுத்தது. ஏற்கெனவே அனுப்பிய சம்மன் சென்றடையாத நிலையில், பிரிட்டனில் உள்ள பிபிசி முகவரிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை ஆகஸ்டில் நடைபெறுமென அறிவித்துள்ளது.

Similar News

News November 15, 2025

அனில் அம்பானி மீது பிடியை இறுக்கும் மத்திய அரசு

image

வரும் திங்கள்கிழமை நேரில் ஆஜராக <<17314173>>அனில் அம்பானி<<>>க்கு ED மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. மேலும், வீடியோ காலில் ஆஜராக விடுத்த கோரிக்கையும் மறுத்துள்ளது. முன்னதாக, ரிலையன்ஸ் அனில் திருபாய் அம்பானி குழுமத்திற்கு (ADAG) எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க மத்திய அரசு உத்தரவிட்டது. அதன் தொடர்ச்சியாக, ADAG குழுமத்திற்கு சொந்தமான 4 நிறுவனங்கள் தற்போது கண்காணிப்பு வளையத்திற்குள் உள்ளது.

News November 15, 2025

பிஹார் ‘சிங்கம்’ தோல்வி

image

பிஹாரில் 2 தொகுதிகளில் சுயேச்சையாக போட்டியிட்ட ஷிவ்தீப் லண்டே தோல்வியை சந்தித்துள்ளார். முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான இவர், தனது பணி காலத்தில் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்ததால், பிஹாரின் ‘சிங்கம்’ என்று அழைக்கப்பட்டார். தற்போது ஓய்வு பெற்ற பின் அரசியலுக்கு எண்ட்ரி கொடுத்து, அராரியா மற்றும் ஜமால்பூர் தொகுதிகளில் போட்டியிட்டார். இரண்டிலும் தோல்வியடைந்தார்.

News November 15, 2025

J.K.ரௌலிங் பொன்மொழிகள்

image

*உலகை மாற்றுவதற்கு நமக்கு மந்திரம் தேவையில்லை. நமக்குத் தேவையான எல்லாச் சக்தியையும் நாம் ஏற்கனவே நமக்குள் சுமந்து செல்கிறோம். *நாம் அனைவரும் நமக்குள் அதிசயங்களை வைத்திருக்கிறோம் என்பதை நினைவில் கொள்வது அவசியமானது. *அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் கற்பனைதான் அடித்தளம். *நான் கடின உழைப்பு மற்றும் அதிர்ஷ்டத்தை நம்புகிறேன், பெரும்பாலும் இரண்டாவதை அடைவதற்கு முதலாவது வழிநடத்துகிறது.

error: Content is protected !!