News April 12, 2025

அகாலிதளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

image

சிரோமணி அகாலி தளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அகாலி தளம் தலைவராக 2008-ல் பதவியேற்ற சுக்பீர் சிங் பாதல் கடந்தாண்டு வரை அப்பதவியில் இருந்தார். சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News December 5, 2025

சிந்தனையை தூண்டும் PHOTOS

image

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் நடப்பதை, எப்படி நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்ற அடிப்படையில்தான் உங்கள் சிந்தனை வடிவமைக்கப்படுகிறது. உண்மையான வளர்ச்சி என்பது என்னவென்று சில புகைப்படங்கள் நம் சிந்தனையை தூண்டுகின்றன. அவற்றை உங்களுக்காக மேலே பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. அனைவரையும் சிந்திக்க தூண்டும் இந்த போட்டோக்களை SHARE பண்ணுங்க.

News December 5, 2025

புதிய தொழிலாளர் சட்டம்.. எப்போது அமல் தெரியுமா?

image

அடுத்தாண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வருகின்றன. இதற்காக 4 தொழிலாளர் சட்டங்களுக்கான விதிகளை இறுதி செய்யும் செயல்முறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. புதிய தொழிலாளர் சட்டமானது தொழிலாளர்களுக்கு அதிக பாதுகாப்பு, சிறந்த சலுகைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய அரசு கூறுகிறது. ‘சம வேலைக்கு சம’ ஊதியம் என்ற விதியால் ஆண்களும், பெண்களும் ஒரே ஊதியம் பெறுவார்கள்.

News December 5, 2025

சீஹாக் ஹெலிகாப்டர்.. ₹7,995 கோடிக்கு இந்தியா ஒப்பந்தம்

image

24MH-60R சீஹாக் ஹெலிகாப்டர்களுக்கான நிலைத்தன்மை தொகுப்பில் அமெரிக்காவுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. 946 பில்லியன் டாலர் (₹7,995 கோடி) தொகுப்பின் மூலம், இந்திய கடற்படையின் கடல்சார் திறன்கள் மேம்படுத்தப்படும். இதில், உதிரிபாகங்கள், துணை உபகரணங்கள், தயாரிப்பு மற்றும் தொழில்நுட்ப ஆதரவு ஆகியவையும் அடங்கும். இது இந்தியா-அமெரிக்கா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பின் புதிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!