News April 12, 2025
அகாலிதளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அகாலி தளம் தலைவராக 2008-ல் பதவியேற்ற சுக்பீர் சிங் பாதல் கடந்தாண்டு வரை அப்பதவியில் இருந்தார். சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 1, 2025
எலும்புகளை வலிமையாக்க இத சாப்பிடுங்க!

நம் உடலின் அஸ்திவாரமாக விளங்கும் எலும்புகளை வலுவாக்குவது மிக அவசியம். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் ஒரு உணவு முருங்கைக்காய். இதில், கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்கள் உள்ளதால் எலும்பை வலிமையாக்கும். இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, அதன் ஆரோக்கியம் கூடும். முக்கியமாக குழந்தைகளின் எலும்புக்கு இது மிகவும் நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
News December 1, 2025
நடிகை சமந்தாவின் சொத்துகள் இவ்வளவு கோடியா..!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவரான சமந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? பல பெரிய நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாசிடர், விளம்பரங்கள், திரைத்துறை சம்பளம் என தற்போதைய நிலவரப்படி தோராயமாக ₹110 கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அவரிடம், என்ன சொத்துக்கள் உள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.
News December 1, 2025
முகத்தில் இத தடவுறீங்களா? ALERT!

முகத்தில் எலுமிச்சை சாறை தடவுவதால் நன்மை கிடைப்பதை விட சருமத்துக்கு பல தீங்குகள் ஏற்படுவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் இருப்பதால் இது சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்துவதோடு, பிம்பிள்ஸை அதிகமாக்கும், சருமத்தின் இயற்கையான pH சமநிலையை சீர்குலைக்கிறதாம். எனவே எலுமிச்சை சாறை முகத்தில் தடவுவதற்கு பதிலாக அதனை குடித்தால் நன்மை கிடைக்கும் என டாக்டர்கள் சொல்றாங்க. SHARE.


