News April 12, 2025
அகாலிதளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் மீண்டும் தேர்வு

சிரோமணி அகாலி தளம் தலைவராக சுக்பீர் சிங் பாதல் அறிவிக்கப்பட்டுள்ளார். பிரகாஷ் சிங் பாதலுக்கு பிறகு அகாலி தளம் தலைவராக 2008-ல் பதவியேற்ற சுக்பீர் சிங் பாதல் கடந்தாண்டு வரை அப்பதவியில் இருந்தார். சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகால் தத் அவருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதால், கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் தற்போது மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
Similar News
News December 25, 2025
ராசி பலன்கள் (25.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 25, 2025
‘பாரத் டாக்ஸி’ vs ஓலா, உபேர் என்ன வித்தியாசம்?

<<18661900>>‘பாரத் டாக்ஸி’<<>> சேவையை முதற்கட்டமாக டெல்லியில் மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதில் டிராக்கிங், 24*7 கஸ்டமர் சர்வீஸ், பல இந்திய மொழிகளில் சேவை வழங்கப்பட உள்ளது. அதேபோல் ola, Uber போன்ற தனியார் நிறுவனங்களை போல் இல்லாமல், டெல்லி போலீசுடன் இணைந்து டிரைவர், பயணிகள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். மேலும், கமிஷன் ஏதும் வசூலிக்காமல், மொத்த பயண கட்டணமும் டிரைவருக்கு போய் சேரும்.
News December 25, 2025
இந்தியாவுடன் அமைதி.. PAK-க்கு ஆயுதம்: சீனாவின் ராஜதந்திரம்

எல்லையில் பதற்றத்தை குறைத்து, இந்தியா உடனான உறவை மேம்படுத்த சீனா திட்டமிட்டுள்ளதாக US ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதேவேளையில், FC-31, JF-17 போர் விமானங்கள் மற்றும் பிற நவீன விமானங்களை வழங்கி பாகிஸ்தானுடன் ராணுவ உறவை மேம்படுத்தவும் சீனா முடிவு செய்துள்ளதாம். இருப்பினும், கடந்த கால கசப்பான அனுபவங்களை மனதில் வைத்து சீனாவுடன் எச்சரிக்கையுடன் உறவை பேண இந்தியா நினைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.


