News November 24, 2024
ஓடும் அரசு பேருந்தில் தூக்குப்போட்டு தற்கொலை

ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
Similar News
News November 27, 2025
தவெகவில் இணைந்தது ஏன்? செங்கோட்டையன் பதில்

தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் வெவ்வேறு கட்சிகள் இல்லை, 2-ம் ஒன்று போலவே செயல்படுகிறது என செங்கோட்டையன் கூறியுள்ளார். தூய்மையான ஆட்சி TN-ல் உருவாக வேண்டும் என தெரிவித்த அவர், அதனால்தான் ’அன்பிற்கினிய இளவல்’ விஜய்யின் கட்சியில் இணைந்ததாகவும் பேசியுள்ளார். மேலும், 2026-ல் மக்களால் மாபெரும் புரட்சி நடக்கும் எனவும் மக்களால் வரவேற்கப்படுகிற விஜய் வெற்றிபெறுவார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
பிரபல தமிழ் நடிகைக்கு 2-வது திருமணம் ❤️(PHOTOS)

பிரபல தமிழ் நடிகை சம்யுக்தாவிற்கு கிரிக்கெட்டர் அனிருதா ஸ்ரீகாந்துடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது. சம்யுக்தா ஷான், விஜய்யுடன் வாரிசு, விஜய் சேதுபதியுடன் துக்ளக் தர்பார் போன்ற படங்களில் நடித்துள்ளார். அனிருதா ஸ்ரீகாந்த் 2008- 15 வரை IPL-ல் விளையாடியுள்ளார். இவர்களது திருமணத்திற்கு திரைத்துறையினர் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News November 27, 2025
செங்கோட்டையன் குறித்த கேள்வியால் டென்ஷனான EPS

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ‘அதை அவரிடம் போய் கேளுங்கள். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்; அதிமுகவில் இல்லாத ஒருவர் குறித்து பதிலளிக்க முடியாது’ என்று இபிஎஸ் ஆவேசமாக பதிலளித்துள்ளார். செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததால், கொங்கு மண்டலத்தில் அதிமுகவுக்கு பாதகமாக அமையலாம் என கூறப்படுகிறது. இதனால், கொங்குவில் கட்சியை பலப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளாராம்.


