News November 24, 2024

ஓடும் அரசு பேருந்தில் தூக்குப்போட்டு தற்கொலை

image

ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

Similar News

News September 16, 2025

போன் உங்களை உளவுப் பார்க்கிறதா?

image

நீங்கள் எங்கே செல்கிறீர்கள், என்ன செய்கிறீர்கள் என்பதையெல்லாம், உங்கள் போன் மூலமே மோசடியாளர்கள் உளவுப் பார்க்க முடியும். இதை தவிர்க்க: *போன்களில் ஆப்களுக்கு லொக்கேஷன் அனுமதியை தவிர்க்கலாம் *நம்பகமல்லாத Caller ID, Spam protection ஆப்களை தவிர்க்கவும் *வை-பை, புளூடூத் ஆட்டோ கனெக்‌ஷனை / டிடெக்‌ஷனை ஆப் செய்யவும் *NFC, Contactless payments-ஐ ஆஃப் செய்யவும் *மெசேஜில் Link preview-ஐ Disable செய்யவும்.

News September 16, 2025

ஒரு நைட் தங்க ₹60,000 வாடகை! எங்கே தெரியுமா?

image

ஊட்டி ஹேர்பின் வளைவில் சென்றாலே பலர் கண்களை மூடிக்கொள்வதுண்டு. ஏனென்றால், உயரம் என்றால் அவ்வளவு பயம். துபாயிலோ 377மீ உயரத்தில் சொகுசு ஹோட்டல் ஒன்று கட்டப்பட்டுள்ளது. வானுயர ஹோட்டலில் மொத்தமுள்ள 82 தளங்களில் 1,004 ரூம்கள் உள்ளன. ஸ்கை கார்டன், ஸ்கை ரெஸ்டாரன்டும் இருக்கின்றன. ₹4,803 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஹோட்டலில், ஓரிரவு தங்க ஒரு நாளுக்கு குறைந்தது ₹60,000 செலவாகுமாம். புக் பண்ணிடலாமா?

News September 16, 2025

BREAKING: முடிவை மாற்றிய இபிஎஸ்.. சற்றுமுன் சந்தித்தார்

image

டெல்லி சென்ற இபிஎஸ் திடீர் திருப்பமாக அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். அதிமுக விவகாரங்களில் டெல்லி தலையிடுவதில்லை என நேற்று அவர் குறிப்பிட்டார். இதனால், செங்கோட்டையன் விவகாரத்தில் அவர் பாஜக தலைவர்களை சந்திக்க மாட்டார் எனக் கூறப்பட்டது. இந்நிலையில், அமித்ஷாவை சந்தித்து அவர் பேசியுள்ளார். கடந்த வாரம் செங்கோட்டையனும் அமித்ஷாவை சந்தித்து பேசியிருந்தார். அதிமுகவில் அடுத்து என்ன நடக்குமோ?

error: Content is protected !!