News November 24, 2024
ஓடும் அரசு பேருந்தில் தூக்குப்போட்டு தற்கொலை

ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
Similar News
News December 2, 2025
ராமநாதபுரம் வாலிபரிடம் ரூ.10.92 லட்சம் மோசடி

ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சமூக வலைதளத்தில் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் பெறலாம் என சிலர் ஆசை காட்டியுள்ளனர். அதை நம்பி ரூ.11 லட்சம் வரை முதலீடு செய்துள்ளார். எந்த லாபமும் வராமல் மேற்கொண்டு பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வாலிபர் அனுப்பிய கணக்கில் இருந்து ரூ.10.92 லட்சத்தை மீட்டு ஒப்படைத்தனர்.
News December 2, 2025
கம்பேக் கொடுக்கும் ஹர்திக் பாண்ட்யா!

ஆசிய கோப்பையில் காயம் அடைந்த ஹர்திக், கடந்த சில மாதங்களாக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்கிறார். BCCI-ன் சிறப்பு மையத்தில்(COE) சிகிச்சை எடுத்து கொண்ட அவர், T20-ல் விளையாட முழு உடற்தகுதி பெற்றுள்ளாராம். எனவே, பரோடா அணிக்காக சையது முஷ்டாக் தொடரில் விளையாடவுள்ளார். இதனை தொடர்ந்து, வரும் 9-ம் தேதி தொடங்கும் SA-வுக்கு எதிரான T20 தொடரிலும் ஹர்திக் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 2, 2025
பிரபல நடிகர் காலமானார்.. மனைவி உருக்கம்

நடிகர் தர்மேந்திராவின் இறுதிச்சடங்கை அவசரமாக முடித்ததற்கான காரணத்தை ஹேமமாலினி விளக்கியுள்ளார். நோய்வாய்ப்பட்ட நிலையில் தன்னை யாரும் பார்க்க கூடாது என்று எப்போதுமே தர்மேந்திரா எண்ணியதாகவும், தனது கஷ்டங்களை நெருக்கமானவர்களிடம் இருந்து கூட அவர் மறைத்தார் எனவும் ஹேமமாலினி உருக்கமாக தெரிவித்துள்ளார். ஒருவரின் மறைவுக்கு பிறகு நடப்பவை அனைத்தும் குடும்பத்தினர் எடுக்கும் முடிவுகள் என்றும் கூறியுள்ளார்.


