News November 24, 2024
ஓடும் அரசு பேருந்தில் தூக்குப்போட்டு தற்கொலை

ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.
Similar News
News November 23, 2025
சினிமா பிரபலம் விபத்தில் பலி.. நெஞ்சை உலுக்கும் (PHOTO)

பிரபல பஞ்சாபி பாடகர் <<18360848>>ஹர்மன் சித்து(37)<<>> பயணித்த கார் லாரி மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது, பாலிவுட் மற்றும் பஞ்சாபி ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நிகழ்வதற்கு சற்று நேரத்திற்கு முன்புதான் தனது மகளிடம் அன்பாக பேசிவிட்டு பூ ஒன்றை பரிசாக கொடுத்துவிட்டு சென்றுள்ளார். கவலையில் ஆழ்ந்துள்ள அந்த பிஞ்சு குழந்தைக்கு யார் ஆறுதல் சொல்வது. So sad!
News November 23, 2025
அரசியலை விட்டு விலகத் தயார்: D.K.S சவால்

டி.கே.சிவகுமாருக்கு CM பதவி தர வலியுறுத்தி, அவரின் ஆதரவு MLA-க்கள் போர்க்கொடி தூக்கியுள்ளதால், கர்நாடக அரசியலில் குழப்பம் எழுந்துள்ளது. காங்., தலைமை சமாதான பேச்சை தொடங்கியுள்ள நிலையில், அமித்ஷாவுடன் DKS-க்கு தொடர்பு இருப்பதாக சித்தராமையா ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால், கடுப்பான DKS, அமித்ஷாவுடன் தொடர்பில் இருப்பதை நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார் என சவால் விடுத்துள்ளார்.
News November 23, 2025
‘சென்யார்’ புயல்: பெயரின் அர்த்தம் தெரியுமா?

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ள புயலுக்கு ‘சென்யார்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதற்கு அரபிக் மொழியில் சிங்கம் என அர்த்தம். பொதுவாக புயல்களுக்கு பெயர் சூட்ட ஒவ்வொரு நாடும் 5 பெயர்களை பரிந்துரைக்கும். அந்த பட்டியலில் இருந்துதான் IMD குறிப்பிட்ட பெயரை தேர்வு செய்கிறது. இந்த பெயரை UAE பரிந்துரைத்தது குறிப்பிடத்தக்கது. SHARE பண்ணலாமே.


