News November 24, 2024

ஓடும் அரசு பேருந்தில் தூக்குப்போட்டு தற்கொலை

image

ஆந்திராவில் திருப்பதி மாவட்டம் ஏர்பேடு பகுதியில் அரசு பேருந்தில் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 3 பயணிகள் மட்டுமே இருந்த பேருந்தில் ஏறி பின் சீட்டில் அமர்ந்தவர், சிறிது நேரத்தில் தான் கொண்டு வந்த கயிற்றால் ஓடும் பேருந்திலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனைக் கண்ட நடத்துநர் போலீசில் புகார் அளித்தார். இறந்தவர் விவரம் மற்றும் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை.

Similar News

News November 16, 2025

இரவில் விஜய் கட்சிக்கு வந்த அதிர்ச்சி

image

SIR-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக தவெக அறிவித்து இருந்தது. இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால், போராட்டம் நடக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பந்தல் அமைத்தனர். ஆனால், போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி, பந்தல் அமைக்க இல்லை என போலீசார் கூறியதால், பந்தல் அகற்றப்பட்டது. இதையடுத்து தவெக என்றாலே போலீசார் கெடுபிடி காட்டுவதாக தொண்டர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

News November 16, 2025

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

image

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

News November 16, 2025

தனியார் பஸ் கட்டணம் உயரப் போகிறது

image

டீசல் விலை உயர்வு, அரசின் இலவச பஸ் பாஸ் உள்ளிட்ட காரணங்களால், கட்டணத்தை மாற்றி அமைக்க, தனியார் பஸ் ஆப்பரேட்டர்கள் சங்கம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இதன் விசாரணையின் போது, கட்டண உயர்வு தொடர்பாக 950 பரிந்துரைகள் வந்துள்ளதாகவும், இது குறித்து டிச.30-க்குள் முடிவு எடுக்கப்படும் என்றும் அரசு தெரிவித்தது. இதையடுத்து, 2026 ஜன.6-ம் தேதி இறுதி முடிவை தாக்கல் செய்ய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டது.

error: Content is protected !!