News May 15, 2024
இவிஎம் பாதுகாப்பு அறையில் திடீர் மின்தடை

திருப்பூரில் இவிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறையில் மின்சாரம் தடைபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இந்த மின்தடை ஏற்பட்டது. 10 நிமிடங்கள் வரை மின் தடை நீடித்த நிலையில், அதை அதிகாரிகள் சரி செய்தனர். ஈரோடு, நெல்லை தொகுதியிலும் இதே பிரச்னை சில நாள்களுக்கு முன் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 3, 2026
அண்ணாமலை, சரத்குமார் ஆதரவாளர்களுக்கு சீட் மறுப்பு

தி.மலையில் அஸ்வத்தாமனுக்கும், தளி தொகுதியில் அண்ணாமலையின் ஆதரவாளரான அமர் பிரசாத் ரெட்டிக்கும் வாய்ப்பு வழங்கப்படும் என பேசப்பட்டது. ஆனால், இருவருக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அதிருப்தியில் இருந்த சரத்குமாரின் ஆதரவாளர்கள் யாருக்கும் சீட் கிடைக்கவில்லை. மூத்த தலைவரான வி.பி.துரைசாமிக்கு பதில், அவரது மகன் பிரேம்குமார் ராசிபுரம் தொகுதி வேட்பாளராக களமிறங்குகிறார்.<<-se>>#TNElection2026<<>>
News April 3, 2026
புதிய கருத்துக் கணிப்பு.. அதிமுக, விஜய்க்கு அதிர்ச்சி

தமிழக தேர்தலுக்கான LOK POLL கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. அதில், திமுக கூட்டணி 181 – 189 இடங்களில் (வாக்குகள் 40%) வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 29% வாக்குகளுடன் 38 – 42 இடங்களை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்றும், 24% வாக்குகளுடன் தவெக 8 – 10 இடங்களில் வெல்லும் எனவும் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி உங்க கருத்து?
News April 3, 2026
ஒரு தொகுதிக்கு வேட்பாளரை அறிவிக்காத காங்.,

27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்., மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. காங்., உத்தேச பட்டியலில் மேலூரில் ரவிச்சந்திரன் போட்டியிடலாம் என கூறப்பட்டது. ஆனால் வேட்பாளர் பட்டியலில் அவர் பெயர் இடம்பெறவில்லை. மேலூரில் இளைஞர் ஒருவரை களமிறக்க வேண்டும் என காங்., தலைமை திட்டமிட்டுள்ளதால், வேட்பாளர் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. <<-se>>#TNElection2026<<>>


