News February 28, 2025
அரசு பஸ்களில் திடீர் கட்டணம் உயர்வு

அரசு பஸ் டிக்கெட் கட்டண உயர்த்தப்பட்டது குறித்து அறிவிப்பு வெளியாவது வழக்கம். ஆனால், அரசு போக்குவரத்து கழக மதுரை மண்டலத்தால் மதுரையில் இருந்து தூத்துக்குடி மார்க்கமாக திருச்செந்தூருக்கு இயக்கப்படும் பஸ்களில் சத்தமின்றி கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. திருச்செந்தூர்- மதுரைக்கு இடைப்பட்ட நிறுத்தங்களுக்கு ரூ.5 முதல் ரூ.9 வரை உயர்த்தப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News February 28, 2025
திடீரென முடங்கிய whatsApp செயலி

வாட்ஸ்ஆப் செயலி திடீரென செயல்படவில்லை என ஆயிரக்கணக்கானோர் தெரிவித்துள்ளனர். சுமார் இரவு 9 மணிக்கு வாட்ஸ்ஆப்பை அணுக முடியவில்லை என்றும், மெசேஜ் அனுப்ப முடியவில்லை எனவும் பலரும் சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ளனர். ஆனால், வாட்ஸ்ஆப் தரப்பில் இதுவரை விளக்கம் வரவில்லை. இது நெட்வொர்க் பிரச்னையில்லை, வாட்ஸ்ஆப்பில் தான் பிரச்னை என்கின்றனர் சிலர். உங்களுக்கு வாட்ஸ்ஆப் வேலை செய்கிறதா.. கமெண்ட் பண்ணுங்க.
News February 28, 2025
போலீஸ் நிலையத்திற்குள் சீமான்.. வெளியே தொண்டர்கள்

விஜயலட்சுமியின் புகார் தொடர்பான விசாரணைக்காக சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். அவருடன் வழக்கறிஞர்களும் வந்துள்ளனர். சீமானின் கயல்விழி காவல்நிலையம் வரவில்லை. அதேநேரத்தில், நாதக தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல்நிலையத்தைச் சுற்றிலும் குவிந்துள்ளனர். வீரப்பனின் மகள் வித்யாராணி, சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோரை உள்ளே போலீசார் அனுமதிக்கவில்லை.
News February 28, 2025
BREAKING: போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜர்

விஜயலட்சுமியின் பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்காக வளசரவாக்கம் காவல்நிலையத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். ஏற்கெனவே விசாரணைக்கு ஆஜராகும்படி வீட்டில் சம்மனை போலீசார் ஓட்டினர். இந்நிலையில் இன்று இரவு சுமார் 9.30 மணிக்கு நேரில் ஆஜராகும்படி அவரை கோரியிருந்தனர். அதையேற்று, சீமான் இரவு 10 மணிக்கு ஆஜராகியுள்ளார். அவரிடம் விஜயலட்சுமி புகார் குறித்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.