News March 21, 2024
அருணாச்சலில் திடீர் நிலநடுக்கம்

அருணாச்சலில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 3.7 ஆக பதிவானது. நள்ளிரவு 1.49 மணியளவில் மேற்கு கெமெங் பகுதியை மையமாக கொண்டு 10 கி.மீ ஆழத்தில் பதிவான ஏற்பட்ட நிலநடுக்கத்தால் சில வினாடிகள் அதிர்வை உணர்ந்த மக்கள், உடனடியாக வீடுகளில் இருந்து வெளியேறினர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல் வெளியாகவில்லை. கடந்த மாதம் இதேபோன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News January 15, 2026
புதுசா பொங்கல் வைக்க போறீங்களா? இத கவனிங்க!

வாசலில் அரிசி மாவால் கோலமிட வேண்டும். பொங்கல் பொங்க உள்ள அடுப்பு, பாத்திரங்களில் மஞ்சள், குங்குமம் இடுங்கள். பாத்திரத்தில் தண்ணீர் ஊறவைத்த அரிசி, பருப்புடன் வெல்லம், முந்திரி, திராட்சையை சேர்த்து பொங்கல் வையுங்கள். பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என ஆனந்தமாக சொல்லுங்கள். பானையை இறக்கி சூரிய வழிபாடு செய்யுங்கள். பின்னர் இலையில் வைத்து காகங்களுக்கு படையுங்கள். தைப்பொங்கல் இனிக்கட்டும்!
News January 15, 2026
BREAKING: ஜன நாயகன்.. சற்று நேரத்தில் புதிய அப்டேட்

விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு சென்சார் வழங்கக்கோரி மேல்முறையீடு செய்த வழக்கு இன்று காலை 10.30 மணிக்கு SC-யில் விசாரணைக்கு வருகிறது. U/A சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு ஐகோர்ட் தடை விதித்தது. இதை எதிர்த்து படக்குழு தொடர்ந்த வழக்கில், SC இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கிறது. ஒருவேளை சென்சார் கொடுக்க ஆணையிட்டால், விரைவில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது.
News January 15, 2026
செல்வப்பெருந்தகை தேர்தலுக்கு முன்பே மாற்றப்படுகிறாரா?

செல்வப்பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் சிலர் டெல்லிக்கு ரிப்போர்ட் அனுப்பியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது. இவரது தலைமையின் கீழ் கட்சி அழிவின் விளிம்பில் இருப்பதாகவும், கட்சியில் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்துவதாகவும், தனது நலன் சார்ந்தே முடிவுகளை எடுப்பதாகவும் புகார் வைக்கப்பட்டுள்ளதாம். வரும் தேர்தலுக்குள் இவர் மாற்றப்பட வேண்டும் எனவும் கட்சியினர் கோரியுள்ளதாக கூறப்படுகிறது.


