News March 22, 2025
தேமுதிக கூட்டணி முடிவில் திடீர் மாற்றம்.. பின்னணி என்ன?

திமுக கூட்டணியில் சேர தேமுதிக காய் நகர்த்தி வருவதாகத் தகவல் கசிந்துள்ளது. பிரேமலதா விஜயகாந்தின் சமீப கால பேச்சுகளும் அதனை உறுதிப்படுத்துவது போல் உள்ளன. வரும் சட்டமன்றத் தேர்தலில் இரட்டை இலக்கத்தில் தொகுதிகள், ராஜ்யசபா சீட்டு கேட்டு மூத்த அமைச்சர் ஒருவரிடம் பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்யசபா சீட்டு விவகாரத்தில் அதிமுகவுடன் ஏற்பட்ட மனக்கசப்பே இதற்கு காரணமாம். உங்கள் கருத்து என்ன?
Similar News
News March 22, 2025
முல்லை பெரியாறு அணையில் ஆய்வு!

முல்லை பெரியாறு அணையில் கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு நடத்தியது. அணையின் பாதுகாப்பு தொடர்பாக ஆய்வு செய்வதற்காக 7 பேர் கொண்ட குழு முல்லை பெரியாறு அணைக்கு வந்தது. தொடர்ந்து பேபி அணை, மதகுகள் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளது. அதன் பின் குமுளியில் இன்று மாலை கண்காணிப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. இதில், தமிழக விவசாயிகளும் பங்கேற்கவுள்ளனர்.
News March 22, 2025
வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள்: ஸ்டாலின்

வரலாற்றில் பொறிக்கப்பட வேண்டிய நாள் இது என CM மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டம் தொடங்கவுள்ள நிலையில் X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், #Fair Delimitationஐ உறுதி செய்வதன் மூலம் அதன் கூட்டாட்சிக் கட்டமைப்பை பாதுகாக்க ஒன்றிணைந்த நாள். அனைத்து மாநில CMகளையும், அரசியல் தலைவர்களையும் இந்த கூட்டத்திற்கு வரவேற்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
News March 22, 2025
டி.கே. சிவகுமாருக்கு எதிராக தமிழிசை ஆர்ப்பாட்டம்!

சென்னையில் தனது வீட்டின் முன்பு கருப்புக் கொடி ஏந்தி தமிழிசை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மேகதாதுவில் அணை கட்டுவதில் உறுதியாக உள்ள கர்நாடகா DY CM டி.கே. சிவகுமார், தமிழகம் வந்திருப்பதை கண்டித்து அவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக, தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக CM ஸ்டாலின் ஏற்பாடு செய்துள்ள கூட்டத்தில், டி.கே. சிவகுமார் கலந்துகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.