News August 2, 2024

சென்னை எழிலகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

image

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 24 மணி நேர கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற அவர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் பெய்து வரும் மழை நிலவரங்களை கேட்டறிந்தார். அதேபோல, மேட்டூர் அணையிலிருந்து அதிக நீர் திறக்கப்படுவதால், காவிரி கரையோர மாவட்டங்களில் செய்துள்ள முன்னேற்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

Similar News

News November 6, 2025

இதெல்லாம் வந்தா இனி மனிதர்களுக்கு சாவே இல்லை!

image

மனிதன் சாகா வரம் பெற முடியுமா (அ) இறந்த மனிதனுக்கு உயிர் கொடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சிகள் பல காலமாக நடக்கிறாது. அதன் விளைவாக பல கண்டுபிடிப்புகளும் அறிமுகமாகியுள்ளது. தற்போது சோதனையில் இருக்கும் அந்த ஆராய்ச்சிகள் வெற்றியை கண்டுவிட்டால் மனிதர்களால் சாகாமல் பல நூற்றாண்டுகளுக்கு வாழமுடியுமாம். அது என்னென்ன ஆராய்ச்சிகள் என்பதை தெரிந்துகொள்ள போடோக்களை SWIPE பண்ணுங்க. உங்களுக்கு எவ்வளவு நாள் வாழ ஆசை?

News November 6, 2025

மதியத்திற்கு மேல் அரைநாள் விடுமுறையா?

image

கனமழையால் இன்று திருப்பத்தூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தி.மலை, வேலூர், விழுப்புரம், காஞ்சி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் 1 மணி வரை மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளதாக IMD எச்சரித்துள்ளது. அதேபோல், மதியத்திற்கு மேல் சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்பதால், அரை நாள் விடுமுறை அளிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

News November 6, 2025

மும்பையில் இது முடியாது: BJP நிர்வாகி கருத்தால் சர்ச்சை

image

நியூயார்க்கில் இந்திய வம்சாவளி முஸ்லிம் வேட்பாளரான ஸோஹ்ரான் மம்தானி வெற்றி பெற்றதை ஒப்பிட்டு, மும்பை பாஜக நிர்வாகி அமித் சதாம் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கான் என்ற பெயர் கொண்ட எவரும் மும்பையில் மேயராக வரமுடியாது என்ற அவர், இது ஒருபோதும் நடக்காது என கூறியுள்ளார். ஆனால் மும்பையில் இதை நடத்திக்காட்ட சிலர் முற்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!