News September 20, 2025
மாணவர்கள் அன்பா சொன்னா புரிஞ்சுப்பாங்க: CM

பள்ளிக்கல்வித் துறை சார்பில், ₹277 கோடி மதிப்பீட்டில் 243 புதிய பள்ளி கட்டடங்களுக்கு CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது ஆசியர்கள் முன் பேசிய அவர், மாணவர்களுக்கு சாதிய உணர்வு, பாலின பாகுபாடு எண்ணங்கள் வராமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், மாணவர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அன்பாக கூறினால் புரிந்துக் கொள்வார்கள் எனவும் கூறினார்.
Similar News
News September 20, 2025
பழவேற்காடு சரணாலயத்தில் மதுக்கடை: அன்புமணி சாடல்

மது வணிகத்தை மட்டுமே முதன்மை நோக்கமாக கொண்டு திமுக அரசு செயல்படுவதாக அன்புமணி விமர்சித்துள்ளார். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தில் டாஸ்மாக் நிறுவனம் விதிகளை மீறி மதுக்கடை நடத்தி வருவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். சுற்றுச்சூழலை அழிக்கும் தமிழக அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என்றும் பறவைகள் சரணாலயத்தில், மதுக்கடைகளை அனுமதிப்பது சட்டவிரோதம் எனவும் அன்புமணி சாடியுள்ளார்.
News September 20, 2025
துயரத்திலும் கடமை தவறாத துனித் வெல்லாலகே

சமீபத்தில் தந்தையை இழந்த துனித் வெல்லாலகே, இலங்கை அணிக்காக செய்த செயல் பாராட்டுகளை பெற்றுள்ளது. தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்த கையோடு அவர், சூப்பர் 4 சுற்றில் விளையாடுவதற்கு துபாய் திரும்பியுள்ளார். சூப்பர் 4 சுற்றில் இலங்கை அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொள்ளும் நிலையில், துனித் வெல்லாலகே போட்டிக்கு தயாராக இருப்பதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
News September 20, 2025
இந்தியாவில் பலவீனமான PM உள்ளார்: ராகுல் காந்தி

நான் மீண்டும் சொல்கிறேன், இந்தியாவில் பலவீனமான PM உள்ளார் என்று ராகுல் காந்தி X பக்கத்தில் பதிவிட்டுள்ளார். USA-வின் H-1B விசாவை பெறுவதற்கான கட்டணம் ₹90 லட்சம் என்று கடுமையாக உயர்த்தி அறிவிக்கப்பட்ட நிலையில், ராகுல் இவ்வாறு விமர்சித்துள்ளார். அதேபோல், நாட்டை பாதுகாப்பதில் தான் வெளியுறவு கொள்கை இருக்க வேண்டும் என்று கார்கேயும் சுட்டிக்காட்டியுள்ளார்.