News May 16, 2024
அரசு கலை கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில், +2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் மே 20 வரை விண்ணப்பிக்கலாம். மே 28 – 30 சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன் 10 – 15, 24 – 29 வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
Similar News
News January 6, 2026
டிரம்ப் கோழையே, முடிஞ்சா புடி: கொலம்பிய அதிபர்

கொலம்பியா மீது ராணுவ நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். இந்நிலையில், அதற்கு ரிப்ளை கொடுத்த கொலம்பிய அதிபர் குஸ்டாவோ பெட்ரோ, மதுரோவை கைது செய்ததுபோல முடிந்தால் தன்னையும் <<18758081>>கைது செய்து<<>> பார் என சவால் விட்டிருக்கிறார். மேலும், டிரம்ப்பை கோழை என சொன்ன அவர், உண்மையை நேருக்கு நேர் அமர்ந்து பேச அழைப்பும் விடுத்திருக்கிறார்.
News January 6, 2026
விஜய்யின் கடைசி சம்பளம் இவ்வளவா..!

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ‘ஜனநாயகன்’ ஜன.9-ல் ரிலீஸாகிறது. இப்படத்திற்காக விஜய் ₹220 கோடி சம்பளம் பெற்றதாக தனியார் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அரசியலில் களம் காணும் விஜய்யின் கடைசி படம் இதுவென்பதால், சினிமாவில் அவர் பெறும் கடைசி சம்பளம் இதுவாகும். H.வினோத் -₹25 கோடி, அனிருத் -₹13 கோடி, பாபி தியோல் & பூஜா ஹெக்டே ஆகியோருக்கு தலா ₹3 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
News January 6, 2026
தீபத்தூண் வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

திருப்பரங்குன்றத்தில் தீபமேற்ற உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை <<18776534>>இரு நீதிபதிகள் அமர்வு<<>> உறுதி செய்துள்ளது. அத்துடன் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் இதோ ◆தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்தில் தான் தீபத்தூண் உள்ளது ◆மாவட்ட கலெக்டரின் மேற்பார்வையில் கோயில் நிர்வாகத்தினர் தீபம் ஏற்ற வேண்டும் ◆மலை மீது தீபம் ஏற்றும்போது பொதுமக்களை அனுமதிக்க கூடாது ◆தர்காவிற்கு இடையூறு இல்லாமல் தூணை இடம் மாற்றலாம்.


