News May 16, 2024
அரசு கலை கல்லூரிகளில் சேர மாணவர்கள் ஆர்வம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில், +2 தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து இதுவரை சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கு மாணவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளம் மூலம் மே 20 வரை விண்ணப்பிக்கலாம். மே 28 – 30 சிறப்பு பிரிவு மாணவர்களுக்கும், ஜூன் 10 – 15, 24 – 29 வரை பொது கலந்தாய்வும் நடைபெற உள்ளது.
Similar News
News August 22, 2025
கட்சியில் அடுத்த வாரிசுக்கு பதவி.. முக்கிய திருப்பம்

பாமக தலைமை நிர்வாக குழு உறுப்பினராக ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். GK மணி, அருள்மொழி, முரளி சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய 21 பேர் கொண்ட குழுவில் ஸ்ரீகாந்திக்கு இடம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மை காலமாக கட்சியின் நிகழ்ச்சிகளில் ராமதாஸுக்கு அருகில் அமர்ந்து வந்த ஸ்ரீகாந்தி, தற்போது அதிகாரப்பூர்வமாக கட்சிக்குள் நுழைந்துள்ளது அன்புமணி தரப்பினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
News August 22, 2025
சில்லித்தனமான செயல்களில் திமுக ஈடுபடாது: பி.மூர்த்தி

தவெக மாநாட்டுக்கு அமைச்சர் பி.மூர்த்தி பல்வேறு தொந்தரவுகளை கொடுத்ததாக ஆதவ் அர்ஜுனா மேடையிலேயே குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், இதுகுறித்து பேசிய மூர்த்தி, தவெக மாநாட்டுக்கு தாங்கள் எந்த இடையூறும் செய்யவில்லை என கூறியுள்ளார். சேர் கொடுக்க மறுப்பது, வாய்க்கால் தோண்டுவது போன்ற எந்தவித சில்லித்தனமான செயல்களிலும் திமுகவினர் ஈடுபட மாட்டார்கள் என்று விளக்கமளித்துள்ளார்.
News August 22, 2025
BREAKING: விடுமுறை.. தமிழக அரசு புதிய அறிவிப்பு

தூய்மை பணியாளர்களுக்கு சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அத்துறையின் ஆணையர் பொன்னையா அனுப்பியுள்ள கடிதத்தில், VPRC, PLF மூலமாக தூய்மை பணியில் ஈடுபடுவோருக்கு வாரம் ஒருமுறை சம்பளத்துடன் விடுப்பு வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். தூய்மை பணியாளர்கள் நீண்ட நாள்களாக இக்கோரிக்கையை அரசுக்கு வைத்திருந்தனர்.