News August 28, 2025
மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.
Similar News
News March 4, 2026
கூட்டணி முடிவு… பின்வாங்கினார்

தனிநபர்களுக்கு இடையே வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் கட்சி என்பது அனைவரை விடவும் பெரியது என மாணிக்கம் தாகூர் எக்ஸ்-ல் பதிவிட்டுள்ளார். கூட்டணி விவகாரத்தில் தலைமை எந்த முடிவு எடுத்தாலும், அதை ஒழுக்கத்துடன் ஏற்றுக்கொள்வேன் என்ற அவர், ஒற்றுமை மிகப்பெரிய பலம் எனவும் கூறியுள்ளார். இந்நிலையில், இதுவரை திமுகவை சீண்டி வந்த மாணிக்கம் தாகூர் தற்போது பின்வாங்கியிருப்பது ஏன் என கேள்வி எழுப்பிவருகின்றனர்.
News March 4, 2026
சற்றுமுன்: விலை சரசரவென குறைந்தது

நாமக்கல்லில் முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ஒரே நாளில் 30 காசுகள் குறைந்துள்ளது. நேற்று மொத்த விலையில் முட்டை ஒன்று ₹4.60-க்கு விற்பனையான நிலையில், இன்று 30 காசுகள் குறைந்து ₹4.30-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா – ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக துபாய், கத்தார், ஓமன் போன்ற நாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அடியோடு நிறுத்தப்பட்டதால், விலை கணிசமாக சரிந்துள்ளது.
News March 4, 2026
அய்யா வைகுண்டர் வழியில் திமுக ஆட்சி: ஸ்டாலின்

இடுப்பில் இருந்த துண்டைத் தலைக்குக் கிரீடமாக மாற்றிய அய்யா வைகுண்டரை நாம் பெற்ற நாள் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சமத்துவக் கனலைச் சமூகத்தில் விதைத்து, கீழ்நோக்கிப் பிடித்தாலும், மேல் நோக்கியே எரியும் தீபம் போல, விளக்கின் ஒளியாய், வீரத் தனமாக இருங்கள் என்றவர். தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் எனும் அய்யா வைகுண்டர் கூற்றையே ஆட்சிக்கான அடிப்படையாக கொண்டு திமுக செயல்படுவதாகவும் கூறியுள்ளார்.


