News August 28, 2025
மாணவர்கள் இனி ஃபோன் பயன்படுத்த தடை

தென்கொரியாவில் மாணவர்களிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவதால், பாலியல் குற்றங்கள், போதைப்பொருள் பயன்பாடு போன்றவற்றில் சிக்குவதாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 2026 முதல் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல தமிழகத்திலும், பள்ளியில் இருந்து வந்தவுடன் மாணவர்கள் செல்போனே கதி என இருக்கின்றனர். இதனை அரசு எப்படி கையாளலாம்? கமண்ட்ல சொல்லுங்க.
Similar News
News August 28, 2025
தங்கம் விலை தலைகீழாக மாறுகிறது

<<17539704>>1 சவரன்<<>> ஆபரணத் தங்கத்தின்(22 காரட்) விலை மீண்டும் ₹75,000-ஐ கடந்துள்ளது. தங்கத்தின் விலை உயர்வு கணிப்புப்படி, 2030-ஆம் ஆண்டில் ஒரு சவரன் இருமடங்காக அதிகரித்து ₹1.50 லட்சமாக இருக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். போர் உள்ளிட்ட காரணங்களால் பாதுகாப்பான முதலீடாக தங்கம், வெள்ளி பார்க்கப்படுவதாகவும், பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கிக் குவிப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
News August 28, 2025
பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்

பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அரசு, NGO இணைந்து பிச்சைக்காரர்கள் இல்லாத மாநிலமாக மாற்ற நடவடிக்கை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக பிச்சைக்காரர்களை தங்க வைக்க மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளது. கடந்த 1972-லேயே தமிழகத்தில், அப்போதைய CM கருணாநிதியால் ‘பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டம்’ கொண்டுவரப்பட்டது.
News August 28, 2025
BREAKING: திமுக மூத்த தலைவர் காலமானார்

திமுக மூத்த தலைவரும், முன்னாள் MLAவுமான சின்னசாமி காலமானார். 1971, 1984, 1989 ஆகிய சட்டப்பேரவைத் தேர்தல்களில் தருமபுரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் மிக நெருக்கமாக இருந்த இவர், தருமபுரி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சியின் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். அவரது உடலுக்கு திமுகவினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.