News August 16, 2024

NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

image

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 15, 2025

ஹைதராபாத் சாலைகளுக்கு கார்ப்பரேட் பெயர்கள்

image

ஹைதராபாத்தில் உள்ள சாலைகளுக்கு Google, Meta, TCS உள்ளிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் பெயர்களை சூட்டவுள்ளதாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். ஹைதராபாத்தை தொழில் வளர்ச்சி நகரமாக மேம்படுத்தும் நோக்கிலும், பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்கும் நோக்கிலும் இவ்வாறு அறிவிப்பதாக கூறினார். 2034-ம் ஆண்டுக்குள் மாநில பொருளாதாரம் 1 டிரில்லியனாகவும், 2047-க்குள் 3 டிரில்லியனாகவும் உயரும் என்றார்.

News November 15, 2025

5000 ஆண்டுகள் வரலாறு.. இந்த நாடுகள் இவ்வளவு பழசா!

image

உலகில் பல்வேறு நாகரிகங்கள் தோன்றி மறைந்துவிட்டன. பல நகரங்கள் எழுச்சி அடைந்து, இருந்த இடமே தெரியாமல் வீழ்ச்சியும் அடைந்துவிட்டன. ஆனால், சில நாடுகள் அனைத்தையும் கடந்து, இன்றும் மனித இனத்தின் ஆணிவேராக இருந்து வருகின்றன. அப்படி உலகின் மிக பழமையான நாடுகளின் பட்டியலை கொடுத்துள்ளோம். போட்டோவை வலது பக்கமாக Swipe செய்து எந்த நாடு மிகவும் பழமையானது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

News November 15, 2025

தேவநாதன் அதிரடியாக கைது

image

பணமோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். முதலீட்டாளர்களிடம் ₹500 கோடிக்கு மேல் மோசடி செய்த வழக்கில் ₹100 கோடி நிபந்தனை தொகை செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு சென்னை கோர்ட் ஜாமீன் வழங்கியது. ஆனால், அந்த நிபந்தனையை நிறைவேற்ற தவறியதால் அவரை கைது செய்ய 2 நாள்களுக்கு முன் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் சென்னை கோர்ட்டில் ஆஜரான நிலையில், அவரை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!