News August 16, 2024

NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

image

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News November 27, 2025

நடிகர் ஜெயராம் கைது செய்யப்படுகிறாரா?

image

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் <<18367317>>ஜெயராம்<<>> முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோயில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜெயராமை கைது செய்ய, SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News November 27, 2025

7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

image

தென்மேற்கு வங்க கடலில் <<18399959>>காற்றழுத்த தாழ்வு மண்டலம்<<>> உருவான நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற IMD அறிவுறுத்தியுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.

News November 27, 2025

செங்கோட்டையனை தொடர்ந்து தங்கமணி விலகலா?

image

அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவிருக்கும் தீர்மானங்கள் குறித்து நேற்று ஆலோசனை செய்யப்பட்டது. இதில், வேலுமணி, சி.வி.சண்முகம், ஆர்.பி.உதயகுமார், ஓ.எஸ்.மணியன், ஜெயக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆனால், EX மினிஸ்டர் தங்கமணி, இந்த ஆலோசனை கூட்டத்தை புறக்கணித்துள்ளாராம். இதனால், செங்கோட்டையனை போலவே, தங்கமணியும் அதிமுகவில் இருந்து விலக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் உண்மை தெரியவரும்.

error: Content is protected !!