News August 16, 2024

NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

image

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News December 12, 2025

NDA கூட்டணியில் இந்த கட்சிகள் சேரலாம்: அண்ணாமலை

image

NDA கூட்டணியில் புதிய கட்சிகளை சேர்ப்பது பற்றி தேசிய பாஜக தலைமை, EPS, நயினார் ஆகியோர் இணைந்து முடிவெடுப்பார்கள் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். TTV, OPS உடனான சந்திப்பு நட்பு ரீதியிலானது என்ற அவர், இருவரையும் கூட்டணியில் சேர்ப்பது குறித்து தமிழக NDA தலைவர் EPS முடிவெடுப்பார் என்றார். மேலும், தங்கள் கூட்டணியில் தேமுதிக, பாமகவையும் இணைக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

News December 12, 2025

TNPSC குரூப் 4 காலியிடங்கள் 4,400 ஆக அதிகரிப்பு

image

2026-ல் நடைபெறவுள்ள <<18460223>>TNPSC குரூப் 4<<>>-க்கான அறிவிப்பு அடுத்த ஆண்டு அக்.6-ல் வெளியாகவுள்ளது. இதனையடுத்து டிச.20-ல் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 4,000 என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கூடுதலாக 400 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன்படி, 4,400 காலிப்பணியிடங்கள் குரூப் 4 தேர்வு மூலம் அடுத்த ஆண்டு நிரப்பப்படவுள்ளது.

News December 12, 2025

Ex அமைச்சர் காலமானார்.. முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

image

முன்னாள் மத்திய அமைச்சர் <<18539967>>சிவராஜ் பாட்டீல்<<>> மறைவுக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் அரை நூற்றாண்டு காலம் அனுபவம் கொண்ட அவர், மக்களவை தலைவர், கவர்னர் உள்ளிட்ட பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியவர் என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். கருணாநிதி மீது பெரும் அன்பும் மரியாதையும் கொண்டு நட்பு பாராட்டிய சிவராஜ் பாட்டீலின் மறைவு வேதனை தருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!