News August 16, 2024

NEET தோல்வியால் மாணவர் தற்கொலை?

image

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே நீட் தேர்வு தோல்வியால் மாணவர் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிலம்பவேளாங்காடு கிராமத்தைச் சேர்ந்த தனுஷ், 2 ஆண்டுகளாக NEET எழுதி தோல்வி அடைந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரும் இல்லாதபோது, அவர் சேலையில் தூக்கிட்டு விபரீத முடிவெடுத்ததாக, உறவினர்கள் கூறுகின்றனர். உடலை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 16, 2025

PAK-கிற்கு செல்ல வேண்டிய நீர் இனி இந்தியாவிற்குள் பாயும்

image

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய நீரை, நம் நாட்டில் பற்றாக்குறையுள்ள மாநிலங்களுக்கு திருப்பிவிட அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் தெரிவித்துள்ளார். இதன்மூலம் விவசாயிகள், பொதுமக்களின் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பாக்.-க்கு செல்ல வேண்டிய சிந்து நதிநீரை மத்திய அரசு நிறுத்தியது.

News September 16, 2025

BREAKING: கூட்டணி முடிவை வெளியிட்டார் டிடிவி

image

டெல்லி பாஜக தலைமை எல்லாத்தையும் சரி செய்துவிடும் என்று யாரும் பகல் கனவு காண வேண்டாம்; கூட்டணிக்கு அழைத்தாலும் இனி போக மாட்டேன் என்று TTV அறிவித்துள்ளார். விஜய் மற்றும் தனியாக போட்டியிட்டு வந்த சீமானும் இந்தமுறை கூட்டணி அமைக்கும் முயற்சியில் இருப்பது எனக்கு தெரியும் என சூசகமாகவும் தெரிவித்துள்ளார். இதனால், 2026-ல் விஜய் அல்லது சீமானுடன் கூட்டணி அமைத்து TTV போட்டியிடலாம் என சொல்லப்படுகிறது.

News September 16, 2025

‘தண்டகாரண்யம்’ படத்திற்கு திருமாவளவன் பாராட்டு

image

‘தண்டகாரண்யம்’ படத்தை முற்போக்கு சிந்தனை உள்ள அனைவரும் வரவேற்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்துள்ளார். மக்கள் நக்சல்வாதிகள் பக்கம் தான் நிற்பார்கள், நக்சல்கள் மக்கள் பக்கம் நிற்கிறார்கள், அதிகார வர்க்கம் பக்கம் ஒருபோதும் நிற்கமாட்டார்கள் என்பதை இப்படம் உணர்த்துவதாக கூறியுள்ளார். மேலும் நக்சல்வாதிகளை மக்களுக்கான போராளிகள் என்றும் பாதுகாவலர்கள் எனவும் திருமாவளவன் குறிப்பிட்டார்.

error: Content is protected !!