News December 27, 2024

ரயிலில் தள்ளிவிட்டு மாணவி கொலை: வழக்கில் தீர்ப்பு

image

சென்னை பரங்கிமலையில் 2022இல் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு காெலை செய்த வழக்கில் கைதான நபரை குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாணவி சத்யபிரியா தன்னை காதலிக்காததால் ரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார். மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் சதீசை குற்றவாளியாக அறிவித்து, தண்டனை விவரம் வருகிற 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Similar News

News July 9, 2025

கோயிலில் இருந்து வரும் போது… இத பிறருக்கு தராதீங்க

image

கோயிலில் இருந்து திரும்பும் சில விஷயங்களை செய்யக்கூடாது என நம்பப்படுகிறது. கோயிலின் மணியை அடித்துவிட்டு வெளியே வருவது, கோயிலின் நேர்மறை ஆற்றலை அங்கேயே விட்டுவிடும் என்பதால், மணியை அடிக்காமல் வருவது நல்லது. பிரசாதமாக கிடைக்கும் எலுமிச்சை பழம், பூ, மாலையை பிறருக்கு அளிக்கக்கூடாது. அதே நேரத்தில் விபூதி, மஞ்சள், குங்குமத்தை பிறருக்கு அளிப்பதில் தவறில்லை. அடுத்த தடவை ஞாபகம் வெச்சிக்கோங்க!

News July 9, 2025

நமீபியா புறப்பட்டார் PM மோடி

image

பிரேசிலில் இருந்து நமீபியா நாட்டிற்குப் புறப்பட்டார் PM மோடி. முன்னதாக, பிரேசில் பிரதமர் லுலா உடன் இருநாட்டு வர்த்தகம், பாதுகாப்பு, சுகாதாரம் உள்பட பல்வேறு குறித்து மோடி பேசினார். இதனையடுத்து, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்ட சில புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், இரு நாட்டுத் தலைவர்களும் சர்வதேச தீவிரவாதத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

News July 9, 2025

Bharat Bandh: TN-ல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும்

image

மத்திய அரசுக்கு எதிராக <<16998000>>13 தொழிற்சங்கங்கள்<<>> இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடுமுறை என சிலர் சோஷியல் மீடியாக்களில் பதிவிட்டு வருகின்றனர். ஆனால், வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் செயல்படும் எனவும், பஸ்களும் வழக்கம்போல் இயக்கப்படும் என அந்தந்த துறைகளின் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், குமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் காலையிலேயே பஸ் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!