News March 24, 2025
மாணவி கூட்டு பலாத்காரம்.. 4 கொடூரர்கள் கைது

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூரில் கல்லூரி மாணவி வீடு திரும்பும் போது 4 பேர் பின் தொடர்ந்துள்ளனர். திடீரென மாணவியை வாயை பொத்தி தூக்கிச் சென்றனர். மறைவான இடத்தில் வைத்து 4 பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவி நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வீடு சென்றார். மாணவியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைதாகியுள்ளனர்.
Similar News
News November 9, 2025
எந்த காவியாலும் திமுகவை வீழ்த்த முடியாது: CM ஸ்டாலின்

EC-ஐ பயன்படுத்தி திமுகவை திருட்டுத்தனமாக வீழ்த்த நடக்கும் முயற்சி தான் SIR என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனால் கருப்பு, சிவப்பு, நீலம் சேர்ந்திருக்கும் போது எந்த காவியாலும் திமுகவை எதுவும் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். அவசர அவசரமாக SIR அமல்படுத்துவது ஏன் என கேள்வி எழுப்பிய CM, வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர் இடம்பெறாமல் இருப்பதை திமுகவினர் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினார்.
News November 9, 2025
இதயக்கூட்டில் துளிர்த்த மிர்னாலினி ரவி

டிக்டாக்-ல் பிரபலமாகி திரையுலகில் தடம்பதித்த புதுவை பெண் மிர்னாலினி ரவி, தெலுங்கில் பிஸியான ஹீரோயினாக வலம் வருகிறார். இவரது சமீபத்திய போட்டோஷூட் புகைப்படங்கள் SM-ல் வைரலாகி வருகின்றன. அவை தங்களது இதயக்கூட்டில் இடம்பிடித்துவிட்டதாக கமெண்ட் செய்யும் ரசிகர்கள், அவரை மீண்டும் கோலிவுட் பக்கம் அழைத்து வாருங்கள் என இயக்குநர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்..
News November 9, 2025
வயிறு உப்புசம் பிரச்னைக்கு எளிய தீர்வு!

இரைப்பை பாதையில் காற்றால் நிரம்பும்போது வயிறு உப்புசம் ஏற்படுகிறது. இதை சரி செய்வதற்கு சீரகம், ஏலக்காய், சோம்பு, ஓமம் போன்றவற்றை சம அளவில் எடுத்து இடிக்கவும். அதன் பிறகு அரை டீஸ்பூன் பொடியை தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்து, 10 நிமிட இடைவெளியில் கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வாருங்கள். இதனால் இரைப்பை பாதையில் உள்ள காற்று குறைந்து வயிற்று உப்புசம் பிரச்னை தீர்க்கப்படும்.


