News March 24, 2025
மாணவி கூட்டு பலாத்காரம்.. 4 கொடூரர்கள் கைது

மத்திய பிரதேச மாநிலம் அனுப்பூரில் கல்லூரி மாணவி வீடு திரும்பும் போது 4 பேர் பின் தொடர்ந்துள்ளனர். திடீரென மாணவியை வாயை பொத்தி தூக்கிச் சென்றனர். மறைவான இடத்தில் வைத்து 4 பேரும் சேர்ந்து அவரை பலாத்காரம் செய்துள்ளனர். படுகாயம் அடைந்த மாணவி நடக்க முடியாமல் தட்டுத்தடுமாறி வீடு சென்றார். மாணவியை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் 4 பேர் கைதாகியுள்ளனர்.
Similar News
News January 6, 2026
வங்கதேசத்தில் இந்து நபர் சுட்டுக் கொலை

வங்கதேசத்தில் இந்துக்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை நீடித்து வருகிறது. <<18771561>>இந்து பெண்<<>> பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானது இன்று வெளிச்சத்திற்கு வந்த நிலையில், தற்போது ராணா பிரதாப் (45) என்பவர் பொதுவெளியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். சந்தையில் பொருள்கள் வாங்கிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த மர்ம நபர்கள் இக்கொலையை செய்துள்ளனர். கடந்த 3 வாரங்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.
News January 6, 2026
5 ஆண்டுகளில் 2 லட்சம் வேலைகள் காலி!

தற்போது IT துறையில் வேலைவாய்ப்புகளை காலி செய்து வரும் AI, அடுத்ததாக வங்கி துறை மீது தனது பார்வையை திருப்பியுள்ளது. அந்த வகையில், ஐரோப்பிய வங்கிகளில் அடுத்த 5 ஆண்டிற்குள் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் பறிபோகும் என சர்வதேச நிதி அமைப்பான Morgan Stanley எச்சரித்துள்ளது. மேலும், பல வங்கி கிளைகள் மூடப்படும் என்றும் கூறியுள்ளது. இது இந்தியா உள்பட உலகநாடுகளிலும் எதிரொலிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது.
News January 6, 2026
ஈரான் வாழ் இந்தியர்களுக்கு அரசு அலர்ட்

<<18755461>>ஈரானில்<<>> அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், தேவை இல்லாமல் இந்தியர்கள் அந்நாட்டிற்கு பயணிக்க வேண்டாம் என மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. ஏற்கெனவே அங்கு இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், போராட்டம் நடக்கும் இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது. <<18742311>>ஈரானில்<<>> 10,000 இந்தியர்கள் வசிக்கும் நிலையில், அதில் பெரும்பாலானவர்கள் மாணவர்கள் ஆவர்.


