News March 13, 2025
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாள்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாள்களில் 80,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37,553 பள்ளிகளில் 2025 – 26 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Similar News
News August 25, 2025
நடிகை ஸ்ரீதேவியின் சொத்து.. பரபரப்பு தகவல்

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான சென்னை ECR-ல் உள்ள இடத்தை போலி வாரிசு சான்று மூலம் 3 பேர் அபகரிக்க முயல்வதாக கணவர் போனி கபூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த கோர்ட் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. 1988-ல் நடிகை ஸ்ரீதேவி இந்த சொத்தை வாங்கியுள்ளார். பிரபல நடிகையின் வாரிசு என போலி சான்று தயாரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 25, 2025
பள்ளிகளுக்கு 3 நாள்கள் விடுமுறை.. HAPPY NEWS

மிலாடி நபி செப்டம்பர் 5-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறையாக அமைந்துள்ளது. இதனையொட்டி, TNSTC சார்பில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு விரைவில் வெளியாகும். இதன்பின், செப்டம்பரில் வார விடுமுறையை தவிர்த்து பிற விடுமுறை இல்லாததால் சொந்த ஊர் செல்பவர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள். SHARE IT.
News August 25, 2025
Already அரசியலில் இருக்கேன்: அதிரடி காட்டும் நடிகர் விஷால்

தான் ஏற்கெனவே அரசியலுக்கு வந்துவிட்டதாக நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் பிறந்தநாளையொட்டி ஊட்டியில் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய விஷால், அரசியல் கட்சிகளின் கொடிகளில் பல நிறங்கள் உள்ளன; ஆனால், ஆக்கப்பூர்வமான செயல்கள் இல்லை என விமர்சனம் செய்தார். மேலும், விஜயகாந்த் இருந்திருந்தால் 2026 தேர்தல் களம் தலைகீழாக மாற்றம் கண்டிருக்கும் என்றும் கூறினார்.