News March 13, 2025
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை மந்தம்

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கிய 12 நாள்களில் 42 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு சேர்க்கை தொடங்கிய 10 நாள்களில் 80,000 மாணவர்கள் வரை சேர்க்கப்பட்ட நிலையில், இந்தாண்டு மாணவர்கள் சேர்க்கை சற்று மந்தமாகவே நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 37,553 பள்ளிகளில் 2025 – 26 கல்வியாண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை கடந்த 1ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
Similar News
News March 13, 2025
அட்லீயின் டிமாண்ட்… எஸ்கேப்பான சன் பிக்சர்ஸ்!

அல்லு அர்ஜுனை வைத்து இயக்கும் படத்திற்கு அட்லீ பெரிய பட்ஜெட்டை நீட்ட, சன் பிக்சர்ஸ் ஒதுங்கி விட்டதாம். அடுத்ததாக இப்படத்தை அல்லு அர்ஜுன், தில் ராஜுவிடம் எடுத்து செல்ல அட்லீ ₹100 கோடி சம்பளம் கேட்டாராம். ஏற்கனவே, அட்லீயின் குருவால் சுமார் ₹150 கோடி வரை இழந்த தில் ராஜூ, எப்படி மீண்டும் இவ்வளவு பெரிய பணத்தை கொடுப்பது என யோசனையில் இருக்கிறாராம். சம்பளமே ₹100 கோடினா… பட்ஜெட் எவ்வளவு இருக்கும்?
News March 13, 2025
மகளிர் உரிமைத் தொகை உயருகிறதா?

மகளிர் உரிமைத்தொகை குறித்து பல்வேறு விவாதங்கள் சோஷியல் மீடியாவில் எழுந்துள்ளன. அதற்கு காரணம் நாளை தாக்கலாகும் TN Budget. புதுவையில் நேற்றைய பட்ஜெட்டின் போது இந்த நிதி ₹1,000லிருந்து ₹2,500 ஆக உயர்த்தப்பட்டது. கர்நாடகா, மகாராஷ்டிராவில் தலா ₹1,500, பஞ்சாபில் ₹1,200 வழங்கப்படும் நிலையில், இத்திட்டத்திற்கு வித்திட்ட தமிழகத்திலும் ₹2,500ஆக உயர்த்த வேண்டும் என்ற பேச்சு எழுந்துள்ளது.உங்கள் கருத்து என்ன?
News March 13, 2025
ரேவந்த் ரெட்டிக்கு நேரில் அழைப்பு!

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆதரவு திரட்டும் நோக்கில் திமுக பிரதிநிதிகள் குழு, ஒடிசா Ex CM நவீன்பட்நாயக், ஆந்திர Ex CM ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. அதன் தொடர்ச்சியாக இன்று தெலங்கானா CM ரேவந்த் ரெட்டிக்கும் நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது.