News March 1, 2025
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ராயப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவச் சேர்க்கையை தொடங்கிய அவர், தனது பிறந்தநாளையும் அங்குள்ள மாணவர்களுடன் கொண்டாடினார். பள்ளிகளில் புதிதாக சேர வந்த மாணவர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி முதல்வர் குதூகலித்தார்.
Similar News
News March 15, 2026
கடலூரில் நாளை நடக்க இருந்த குறைகேட்பு கூட்டம் ரத்து

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை அன்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடக்க இருந்த குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
News March 15, 2026
அனுமதி இல்லை.. தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பு

வாக்குச்சாவடிக்கு செல்போனை எடுத்துச் செல்ல வாக்காளர்களுக்கு அனுமதி கிடையாது என ECI அறிவித்துள்ளது. இதற்காக வாக்குச்சாவடிக்கு வெளியே செல்போன் டெபாசிட் மையம் அமைக்கப்படும். அங்கு செல்போனை ஒப்படைத்த பிறகே வாக்குச்சாவடிக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்களித்த பிறகு செல்போனை பெற்றுக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்படவுள்ளது.
News March 15, 2026
2021 தேர்தல் களம் எப்படி இருந்தது? REWIND

2026 தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. தற்போது வரை நான்குமுனை போட்டியாக உள்ள தேர்தல் களத்தில் யார் ஆட்சியை பிடிக்கப் போகிறார்கள் என்று மே 4-ம் தேதி தெரிந்துவிடும். இந்நிலையில், 2021 தேர்தல் களம் எப்படி இருந்தது, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கிடைத்த சீட்கள், வாக்கு சதவீதம், வாக்காளர்கள் எண்ணிக்கை போன்றவற்றை மேலே உள்ள போட்டோஸை வலப்பக்கமாக swipe செய்து பாருங்கள். SHARE


