News March 1, 2025
பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கியது

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 2025-26ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை ராயப்பேட்டை அரசுப் பள்ளியில் மாணவச் சேர்க்கையை தொடங்கிய அவர், தனது பிறந்தநாளையும் அங்குள்ள மாணவர்களுடன் கொண்டாடினார். பள்ளிகளில் புதிதாக சேர வந்த மாணவர்களுக்கு மலர் மாலைகள் அணிவித்து இனிப்புகள் வழங்கி முதல்வர் குதூகலித்தார்.
Similar News
News March 1, 2025
மகனை துடிதுடிக்க கொன்ற தாய்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

பூந்தமல்லியில் 6 வயது மகனை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018இல் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி என்ற பெண் தனது மகன் ஜெயகாந்தை தலையணையால் அழுத்தி, கொலை செய்து உடலை எரித்து வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் வீசினார். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீனாட்சி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதார். இப்படியும் ஒரு தாயா?
News March 1, 2025
நீண்ட நாள் ஆரோக்கியமாக வாழ…

நீண்ட ஆரோக்கியமான உடல்நிலைக்கு இந்த சிம்பிளான 3 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க: சிக்கன், மட்டனுக்கு பதிலாக மீனை அதிகமாக சாப்பிடுங்கள். எப்போதாவது உண்ணாவிரதம் இருங்கள். உடலுக்கான பெஸ்ட் டையட்டை டாக்டரிடம் கேட்டு அறியுங்கள் * உடற்பயிற்சி, ஏரோபிக், யோகாவை வழக்கமாக்கி கொள்ளுங்கள் *பல நோய்களுக்கு தனிமை ஒரு முக்கிய காரணியாகிறது. எனவே நண்பர்கள், குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிடுங்கள். SHARE IT.
News March 1, 2025
அழிவின் விளிம்பில் இருந்து 64% வளர்ச்சி அடைந்த சிங்கம்!

அழிவின் விளிம்பில் இருந்த ஆசிய சிங்கங்களை காப்பாற்ற 1973ல் கிர் லயன் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம், 2010ல் 411 ஆக இருந்த சிங்கங்களின் எண்ணிக்கை 2020ல் 674ஐ எட்டியது. அதாவது, 64% எண்ணிக்கை உயர்வு. இத்திட்டம், குஜராத்தின் சாசன் கிர் புலிகள் காப்பகத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இந்த திட்டத்திற்காக 2023- 2024 நிதியாண்டில் மட்டும் இந்திய அரசாங்கம் ₹155.5 கோடியை ஒதுக்கியது.