News March 29, 2025

நீட் தேர்வு அச்சத்தால் மாணவி தற்கொலை

image

நீட் தேர்வு அச்சத்தால், மீண்டும் ஒரு மாணவி தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அண்ணாநகரில் உள்ள தனியார் அகாடமியில் பயின்று வந்த தர்ஷினி 4/5/2025இல் நடக்கவுள்ள தேர்வுக்கு தயாராகி வந்த நிலையில், இன்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரிக்கின்றனர். அனிதா முதல் தர்ஷினி வரை பல உயிர்கள் பறிபோயிவிட்டன. ஆனால், இதற்கு தீர்வுதான் இதுவரை கிடைக்கவில்லை.

Similar News

News November 12, 2025

தோட்டா தரணியை வாழ்த்திய CM ஸ்டாலின், EPS

image

பிரான்ஸ் அரசின் ‘செவாலியே’ விருதை பெறவுள்ள தோட்டா தரணிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். Oxford-ல் ஒளிரும் பெரியாரின் ஓவியத்தை தந்த தோட்டா தரணிக்கு, இந்த விருது அறிவிக்கப்பட்டதில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனவும் பதிவிட்டுள்ளார். EPS தன் வாழ்த்து செய்தியில், கலை இயக்கத்தில் மெச்சத்தக்க சாதனைகள் புரிந்த தரணியின் மணிமகுடத்தில் இவ்விருது மற்றுமொரு முத்தாய் ஜொலிக்கட்டும் எனக் கூறியுள்ளார்.

News November 12, 2025

விலை தாறுமாறாக உயரப்போகிறது

image

சிமெண்ட் விலைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து உயர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மழைக்காலம், GST சீர்திருத்தம் உள்ளிட்ட காரணங்களால் சிமென்ட் விலை சராசரியாக ₹6 வரை குறைந்திருந்தது. தற்போது தேவை அதிகரித்துள்ளதால் நாடுமுழுவதும் சிமெண்ட் மூட்டைகளின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இதை உடனே ஷேர் செய்யுங்க..

News November 12, 2025

டெல்லி கார் வெடிப்பு: வெளியான பரபரப்பு தகவல்கள்

image

டெல்லி கார் வெடிப்பு வழக்கில் சிக்கிய தீவிரவாதிகளின் திட்டம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. முதன்முதலில் குடியரசு தினம் மற்றும் தீபாவளி அன்று மிகப்பெரிய குண்டுவெடிப்புகளை நிகழ்த்த இவர்கள் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இதற்காக கைதான உமர் நபி மற்றும் உமர் முகமது ஆகியோர் செங்கோட்டையில் பலமுறை உளவு பார்த்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக NIA கைதான 9 பேரிடம் விசாரணை நடத்திவருகிறது.

error: Content is protected !!