News April 27, 2025

கம்பீருக்கு கொலை மிரட்டல் விடுத்த மாணவர் கைது!

image

கம்பீருக்கு<<16198203>> ‘I kill you’<<>> என மெயில் அனுப்பிய வழக்கில், குஜராத்தை சேர்ந்த ஜிக்னேஷ்சிங் பர்மர் (21) என்ற இன்ஜினியரிங் மாணவரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். அவருக்கு மனநல பாதிப்பு இருப்பதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து கடந்த 22-ம் தேதி கம்பீருக்கு இந்த மெயில் வந்திருந்தது. ஏற்கனவே, கம்பீருக்கு 2022-ல் இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் மெயில் வந்திருந்தது.

Similar News

News December 9, 2025

இன்று வரலாறு படைப்பாரா பும்ரா?

image

SA-க்கு எதிரான <<18509403>>டி20 தொடர்<<>> இன்று தொடங்குகிறது. இந்நிலையில், தற்போது வரை டி20 போட்டிகளில் 99 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பும்ரா, இன்றைய போட்டியில் ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் போதும், வரலாறு படைப்பார். அதாவது, 3 வடிவ கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களை கைப்பற்றிய முதல் இந்திய பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைப்பார். T20 போட்டிகளில் 100 விக்கெட்களை எடுத்த 2வது இந்திய பந்துவீச்சாளராகவும் அவர் மாறுவார்.

News December 9, 2025

விஜய்க்காக ‘மொட்டை’ அடித்த பெண்

image

கரூர் சம்பவத்திற்கு பின் பொதுவெளியில் விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பு புதுச்சேரியில் இன்று நடைபெறுகிறது. இந்நிலையில், எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது என்றும், ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் வேண்டி, புதுச்சேரியை சேர்ந்த தவெக பெண் தொண்டர் முடி காணிக்கை செலுத்தியுள்ளார். மேலும், இந்த முடி காணிக்கையை அடையாறில் உள்ள புற்றுநோய் மையத்திற்கு தானம் செய்யப்போவதாகவும் அப்பெண் அறிவித்துள்ளார்.

News December 9, 2025

புஸ்ஸி ஆனந்துக்கு புதுச்சேரி எஸ்பி எச்சரிக்கை

image

புதுச்சேரியில் விஜய் மக்கள் சந்திப்பில், பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட தவெக நிர்வாகிகள் போலீஸிடம் வலியுறுத்தினர். அதற்கு, உங்களால் பலர் இறந்துள்ளனர், நான் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் சொல்லாதீர்கள் என பெண் SP ஈஷா சிங் கறாராக கூற, அங்கிருந்து ஆனந்த் புறப்பட்டார். இதனால் பதற்றம் நீடிக்கும் நிலையில், இன்னும் சற்று நேரத்தில் விஜய் உரையாற்ற உள்ளார்.

error: Content is protected !!