News April 8, 2025

கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

image

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

Similar News

News December 23, 2025

10-வது போதும்.. தமிழக அரசில் ₹90,000 சம்பளம்!

image

✱சென்னை நகர நகர்ப்புற சுகாதாரத் திட்டத்தில் உள்ள 309 Office Assistant காலியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱வேலைக்கு ஏற்ப கல்வித்தகுதி 10-ம் வகுப்பு முதல் MBBS வரை மாறுபடுகிறது ✱ தேர்ச்சி முறை: Shortlisting of Applications, Personal Interview ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜனவரி 5 ✱விண்ணப்பிக்க படிவம் பெற <>இங்கே <<>>கிளிக் செய்யவும் ✱சம்பளம்: ₹10,000 – 90,000 வரை. SHARE IT.

News December 23, 2025

யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

image

சேலத்தில் டிச.29-ல் பாமக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டங்கள் நடைபெறும் என செய்திகள் வெளியாகின. இந்நிலையில், பாமக பொதுக்குழு கூட்டவும், நடத்தவும் கட்சி தலைவரை தவிர யாருக்கும் அதிகாரம் இல்லை என்று அன்புமணி தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், சேலத்தில் நடைபெறவிருக்கும் கூட்டம் பாமக பொதுக்குழு அல்ல என்றும், அதில் எடுக்கும் முடிவுகள் பாமகவை கட்டுப்படுத்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 23, 2025

இளைஞர்கள் ஓட்டு தவெகவுக்கு செல்லுமா? கனிமொழி

image

மகளிர், சிறுபான்மையினர், இளைஞர்களின் வாக்குகள் தவெகவுக்கு செல்லுமா என்ற கேள்விக்கு, தேர்தல் முடிந்த பிறகு அதற்கான பதில் நிச்சயம் உங்களுக்கு தெரியும் என MP கனிமொழி தெரிவித்துள்ளார். கோவையில் பேசிய அவர், பெண்களுக்கு பாதுகாப்பில்லை என அரசியல் காரணங்களுக்காக தேர்தல் நேரத்தில் பலர் பொய் பிரச்சாரம் செய்வார்கள். அதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என கூறியுள்ளார். நீங்க என்ன நினைக்கிறீங்க?

error: Content is protected !!