News April 8, 2025
கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
Similar News
News November 28, 2025
கொலஸ்ட்ரால் பிரச்னை வரக்கூடாதா? இத பண்ணுங்க

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தும் சில எண்ணெயும் சமையலுக்கு பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். *ஆலிவ் ஆயில்: ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்திருக்கிறதாம். நல்லெண்ணெய்: இதய நோயாளிகள் மற்றும் உடலில் அதிக கொழுப்பு உள்ளவர்களுக்கு சிறந்ததாம். கடலை எண்ணெய்: வேர்க்கடலையில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.
News November 28, 2025
BREAKING: திமுக அமைச்சர் விடுவிப்பு

2006 – 2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த பெரிய கருப்பன், வருவாய்க்கு அதிகமாக ₹1.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிந்தது. இதில் அவரது தாயார், மனைவி, மகன், மைத்துனர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததாக கூறி, இவ்வழக்கை சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட் ரத்து செய்துள்ளது.
News November 28, 2025
உள்வாங்கும் சென்னை.. காத்திருக்கும் ஆபத்து

ஜனத்தொகை, நிலத்தடி நீரை அதிகளவு உறிஞ்சுவது உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட நகரங்களில் நிலம் உள்வாங்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2015-2023 வரையிலான சாட்டிலைட் படங்களை ஆராய்ந்ததில் சென்னையில் 30 மி.மீ அளவிற்கு நிலங்கள் உள்வாங்கியுள்ளன. குறிப்பாக சென்னையில் அடையார், தண்டையார்பேட்டை, வளசரவாக்கத்தில் நிலம் உள்வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.


