News April 8, 2025
கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.
Similar News
News April 17, 2025
காலையில் 30 நிமிடங்களுக்கு இப்படி செய்தால் ..!

வாக்கிங் 10,000 ஸ்டெப்ஸ்தான் நடக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செய்யுங்கள் என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இது உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவற்றின் அபாயத்தை குறைக்கும் எனவும் கூறுகின்றனர். ஆனால், நடக்கும்போது, கொஞ்சம் சீரான வேகத்தோடு நடக்க வேண்டும். இது உடலின் சுவாசம் மற்றும் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. SHARE IT.
News April 17, 2025
அட்சய திருதியை: தங்கம் வாங்க புதிய விதிகள் அறிமுகம்

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதால், <<16124391>>அட்சய திருதியை<<>>க்கு தங்கம் வாங்க, நகைக்கடைகள் புதிய முறையை அறிமுகம் செய்துள்ளன. அட்சய திருதியைக்கு தங்கம் வாங்க வரும் போது, முன்பதிவு செய்திருந்த தினத்திலிருந்து அட்சய திருதியை வரை, எந்த நாளில் விலை குறைவாக உள்ளதோ, அந்த விலைக்கு நகை வாங்கிக் கொள்ளலாம் என நகைக் கடைகள் அறிவித்துள்ளன. அதன்படி, பலரும் ஆர்வத்துடன் முன்பணம் செலுத்தி வருகின்றனர்.
News April 17, 2025
3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்(MET) கணித்துள்ளது. சென்னை, விருதுநகர், மதுரை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இரவில் பரவலாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில் வெப்ப அலை வீசும் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம்.