News April 8, 2025

கவர்னர் பதவி விலகக் கோரி வலுக்கும் குரல்கள்!

image

வரலாற்றில் முதல்முறையாக மசோதாக்கள் மீது முடிவெடுக்க TN கவர்னருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்து அளித்த தீர்ப்பு, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என CM ஸ்டாலின் வரவேற்றுள்ளார். மேலும், கவர்னர் நிறுத்தி வைத்த 10 மசோதக்களுக்கும் உச்ச நீதிமன்றமே ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வருகின்றன.

Similar News

News November 27, 2025

நடிகை அம்பிகா வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

image

பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP

News November 27, 2025

USA-வில் ஆப்கானியர்கள் குடியேற்றத்துக்கு தடை!

image

USA வெள்ளை மாளிகை அருகே <<18400484>>துப்பாக்கிச்சூடு<<>> நடத்திய நபர் ஆப்கனை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டது. இதன் எதிரொலியாக ஆப்கனை சேர்ந்த அனைத்து குடியேற்ற கோரிக்கைகளையும் காலவரையின்றி நிறுத்தி வைப்பதாக அமெரிக்கா அதிரடியாக அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக USCIS கூறியுள்ளது. இதனிடையே, இந்த தாக்குதலை ‘பயங்கரவாத செயல்’ எனக்கூறி டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

News November 27, 2025

வெல்வோம் 200, படைப்போம் வரலாறு: உதயநிதி

image

பிறந்தநாளை ஒட்டி அண்ணா, கலைஞர், பெரியார் நினைவிடங்களில் DCM உதயநிதி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவரது பிறந்தநாள் விழாவில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பேசிய உதயநிதி, SIR திட்டத்தில் வாக்குகளை உறுதி செய்யும் பணியில் அனைவரும் ஈடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும், வெல்வோம் 200 படைப்போம் வரலாறு எனவும், இதுவே தனது பிறந்தநாள் வாழ்த்து செய்தி என்றும் கூறினார்.

error: Content is protected !!