News May 2, 2024

அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை

image

தஞ்சை பெரிய கோவில் தொடர்பாகத், தமிழக அரசு மீது அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என இந்து சமய அறநிலையத்துறை எச்சரித்துள்ளது. கோவில் சன்னதியின் பின்புறம் மத்தியத் தொல்லியல் துறையினர் பராமரிப்புப் பணி செய்து வருகின்றனர். இந்த நிலையில், கோவிலைச் சிதைக்கும் வகையில் அறநிலையத்துறை ஈடுபடுவதாக வெளியாகும் செய்தியில் உண்மை இல்லை எனக் கூறியுள்ள அரசு, அவதூறு பரப்பினால் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.

Similar News

News September 21, 2025

Baby Bump-உடன் கத்ரீனா❤️❤️! PHOTO

image

பாலிவுட் ஸ்டார் தம்பதிகள் விக்கி கௌஷல் & கத்ரீனா கைஃப் விரைவில் பெற்றோராக உள்ளனர். இத்தகவல் முன்னரே வெளியாகிவிட்ட சூழலில். தற்போது கத்ரீனா ‘Baby Bump’-உடன் போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இத்தம்பதிகளுக்கு வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் குழந்தை பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் கடந்த 2021 டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

News September 21, 2025

விஜய் பேச்சு அனைத்தும் பொய்: ஆளூர் ஷாநவாஸ்

image

நாகை பரப்புரையின்போது விஜய் பேசியது அனைத்தும் பொய் என்று விசிக MLA ஆளூர் ஷாநவாஸ் விமர்சித்துள்ளார். பத்திரிகையாளர்களை சந்திக்க துணிச்சல் இல்லாத விஜய், அண்ணாமலை, ஆர்.என்.ரவியை போன்று அவதூறு அரசியல் செய்வதாக சாடினார். மேலும், அவதூறான இட்டுக்கட்டிய பொய்களையும், வாய்க்கு வந்ததையும் பேசுவதை நிறுத்திவிட்டு, தவெக கொள்கையை முதலில் தெரிவிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

News September 21, 2025

USA-வில் உள்ள இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு

image

USA-வின் H-1B விசா பெறுவதற்கான விண்ணப்ப கட்டணம் ₹88 லட்சமாக உயர்த்தப்பட்டதால் இருநாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், USA-வில் அவசர உதவி தேவைப்படும் இந்தியர்களுக்காக இந்திய தூதரகம் உதவி எண் அறிவித்துள்ளது. அவசர உதவிகள் தேவைப்பட்டால் மட்டும் +12025509931 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் எனவும் தகவல்களை விசாரிக்க ஃபோன் செய்ய வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!