News June 18, 2024
வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை!

மணிப்பூரில் மெய்தி & குக்கி இன மக்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மணிப்பூர் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், இனி வன்முறை எதுவும் நிகழாது என அதிகாரிகள் உறுதிபடுத்த வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். அத்துடன், வன்முறையை தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
Similar News
News March 7, 2026
தாக்குதல் நடத்தியதற்கு மன்னிப்பு கேட்ட ஈரான்

அண்டை நாடுகளை தாக்கியதற்கு ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் மன்னிப்பு கோரியுள்ளார். அண்டை நாடுகள் மீது இனி எந்தத் தாக்குதல்களும் நடத்தப்படாது என கூறிய அவர், அண்டை நாடுகளின் நிலப்பரப்பில் இருந்து ஈரானை தாக்கினால் மட்டுமே பதில் தாக்குதல் நடத்துவோம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், எதிரிகள் ஈரானை பணிய வைக்க முடியாது; அந்த கனவு அவர்களுடனேயே மண்ணுக்குள் போக வேண்டியதுதான் எனவும் கூறியுள்ளார்.
News March 7, 2026
சுதந்திரத்தை கொண்டாடாத காந்தி.. ஏன் தெரியுமா?

1947 ஆகஸ்ட் 15இல் இந்தியா தனது சுதந்திரத்தை கொண்டாடிக் கொண்டிருந்தபோது, காந்தி மட்டும் கொண்டாடவில்லை. ஏன் என கேள்வி எழலாம். தற்போதைய மேற்குவங்கம், வங்கதேசத்தில் (அப்போது வங்காளம்) இந்துக்கள், முஸ்லிம்கள் இடையே கலவரம் மூண்டது. இதனால் கொல்கத்தாவில் தங்கி சமரச முயற்சியில் ஈடுபட்டதால், அவர் கொண்டாடவில்லை. 1948 ஜனவரியில் கொல்லப்பட்டதால், அவரால் கடைசி வரை சுதந்திரத்தை கொண்டாடவே முடியவில்லை.
News March 7, 2026
BIG NEWS: தமிழகத்தை உலுக்கிய ரேப் வழக்கில் பரபரப்பு தீர்ப்பு

கோவையில் கல்லூரி மாணவியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என கோர்ட் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலியல் வன்கொடுமை செய்த சிவகங்கையைச் சேர்ந்த சதீஷ், கார்த்திக், தவசி மீது 8 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், 126 நாள்களில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான தண்டனை விவரம் இன்றே அறிவிக்கப்படவுள்ளது.


