News July 20, 2024
10 பேரை கடித்த தெருநாய்: அரசு நடவடிக்கை எடுக்குமா?

திண்டுக்கல் மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்டவர்களை தெருநாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் நாய், மாடு போன்ற பிராணிகள், மக்களை தாக்கும் சம்பவம் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், வேடச்சந்தூரில் சுற்றித்திரிந்த நாய் கடித்ததில் 10க்கும் மேற்பட்டோர், காயமடைந்தனர். இதனிடையே நாய், மாடுகள் தாக்கும் பிரச்னைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News November 27, 2025
நாளை பள்ளிகள் விடுமுறையா? CM ஸ்டாலின் ஆலோசனை

வங்கக்கடலில் 3 மணி நேரத்தில் ‘டிட்வா’ புயல் உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து CM ஸ்டாலின் ஆலோசித்து வருகிறார். தண்ணீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பது; மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது; உதவி மையங்கள் அமைப்பது; அலர்ட் விடுக்கப்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது.
News November 27, 2025
டி.கே.சிவக்குமாரை CM ஆக்க காங்., சத்தியம் செய்ததா?

யாராக இருந்தாலும் சரி கொடுத்த வார்த்தையை காப்பாற்ற வேண்டும் என டி.கே.சிவக்குமார் பதிவிட்டுள்ளார். 2023-ல் கர்நாடக பவர் ஷேரிங் குறித்து ஒரு ஒப்பந்தம் போடப்பட்டதாக கூறப்படுகிறது. அதில் முதல் 2.5 ஆண்டுகள் சித்தராமையாவும் அடுத்த 2.5 ஆண்டுகள் DKS-ம் CM-ஆக செயல்படுவர் என காங்., மேலிடம் வாக்குகொடுத்ததாம். இந்நிலையில், இந்த சத்தியத்தை நினைவுப்படுத்தவே அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளதாக பேசப்பட்டு வருகிறது.
News November 27, 2025
நடிகை அம்பிகா வீட்டில் சோகம்.. கண்ணீர் அஞ்சலி

பிரபல நடிகைகள் அம்பிகா மற்றும் ராதாவின் தாயார் சரசம்மா நாயர்(87) காலமானார். கேரளாவை பூர்வீகமாக கொண்ட இவரின் இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் அருகே உள்ள அவர்களது சொந்த ஊரான கல்லாராவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த சரசம்மா, 2014-ம் ஆண்டு வரை கேரளா மகிளா காங்கிரஸின் தலைவராக இருந்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். #RIP


