News September 20, 2025
தமிழகத்தில் புயல் சின்னம்.. கனமழை வெளுத்து வாங்கும்

செப்.25-ல் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இதற்கிடையே, இன்று 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, நீலகிரி, தேனி, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், தேவையின்றி வெளியே செல்வதை தவிருங்கள். உங்க ஊரில் மழை பெஞ்சா லைக் பண்ணுங்க.
Similar News
News September 20, 2025
நான் பேசுவதே 3 நிமிடம் தான்: விஜய்

தனது தேர்தல் பரப்புரைக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக விஜய் விமர்சனம் செய்துள்ளார். நாகை பரப்புரையில் பேசிய அவர், அங்கே பேசக் கூடாது, இங்கே பேசக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மேலும், 5 நிமிடங்கள்தான் பேச வேண்டுமென கூறுவதாகவும், தான் பேசுவதே 3 நிமிடங்கள்தான் என்றும் விஜய் கிண்டலாக கூறினார். விஜய் பரப்புரைக்கான கட்டுப்பாடுகளை எப்படி பார்க்குறீங்க?
News September 20, 2025
திருவாரூர் கருவாடாக காய்கிறது: விஜய்

திருவாரூரில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட விஜய், திமுகவை நேரடியாக தாக்கி பேசினார். திருவாரூர் தேரை ஓட வைத்தவர் என கருணாநிதிக்கு திமுகவினர் புகழாரம் சூட்டி வருவதாக குறிப்பிட்ட அவர், நன்றாக ஓட வேண்டிய தமிழகம் எனும் தேரை நாலாப் பக்கமும் கட்டையை போட்டு ஸ்டாலின் நிறுத்திவிட்டதாக குற்றஞ்சாட்டினார். எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் திருவாரூர் கருவாடாக காய்கிறது என்றும் அவர் விமர்சனம் செய்தார்.
News September 20, 2025
பூமிக்கு இரண்டு நிலவுகளா? 60 ஆண்டு மர்மம்

சுமார் 60 ஆண்டுகளாக 2025 PN7 எனும் சிறுகோள் பூமியை பின் தொடர்வது ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இதனை, Earth’s Hidden Moon என அழைக்கும் விஞ்ஞானிகள், இது பூமியுடன் இணைந்து சூரியனை சுற்றுவதாக தெரிவித்துள்ளனர். அளவில் மிகவும் சிறிதாக இருப்பதால் இந்த சிறுகோள் டெலஸ்கோப்களில் மட்டும் தான் தென்படுமாம். இதனால் தான் 60 ஆண்டுகளாக யார் கண்ணிலும் படாமல் இருந்திருக்கிறது. SHARE.