News November 25, 2024
தமிழகத்தில் புயல் கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Similar News
News December 5, 2025
சினிமா பிரபலம் காலமானார்.. கமல் உருக்கமுடன் ஆறுதல்

தமிழ் சினிமாவின் ட்ரேட் மார்க் தயாரிப்பாளரான <<18468825>>AVM சரவணன்<<>> பூவுலகை விட்டு மறைந்துவிட்டார். வெளியூர் பயணம் காரணமாக, அவரது இறுதிச் சடங்கில் கமல் பங்கேற்காத நிலையில், உருக்கமுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று சரவணன் வீட்டிற்கு சென்ற அவர், குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். AVM புரொடக்சன் தயாரிப்பில் சகலகலா வல்லவன் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் கமல் நடித்துள்ளார்.
News December 5, 2025
புடின் முன்னிலையில் PAK-க்கு செய்தி சொன்ன PM மோடி

ரஷ்ய அதிபர் புடின் முன்னிலையில், பாகிஸ்தானுக்கு PM மோடி கூர்மையான செய்தியை அனுப்பியுள்ளார். தீவிரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவும், ரஷ்யாவும் தோளோடு தோள் நின்று செயல்படுவதாக PM மோடி தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதல் மற்றும் ரஷ்யாவின் குரோகஸ் நகரில் நடந்த தாக்குதலுக்கு தீவிரவாதம் தான் முழு காரணம், அதற்கு எதிராக கூட்டாக செயல்பட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
News December 5, 2025
குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறாங்களா?

குழந்தைகள் சாப்பிடமாட்டேன் என அடம்பிடித்தால் உடனே அவர்களுக்கு பிடித்ததை சமைத்து கொடுக்காதீர்கள். அவர்கள் ஒருவேளை சாப்பிடாமல் இருந்தாலும் பரவாயில்லை, நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதைதான் அவர்களும் சாப்பிடணும் என சொல்லுங்கள். இதற்கு மறுப்பு தெரிவிக்காமல் போனால், நாளடைவில் அவர்கள் அனைத்திற்கும் அடம்பிடிப்பார்கள் என குழந்தைகள் நல டாக்டர்கள் சொல்கின்றனர். எனவே குழந்தைகளை அப்படி வளர்க்காதீங்க. SHARE.


