News November 25, 2024
தமிழகத்தில் புயல் கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Similar News
News November 23, 2025
திமுக, அதிமுக ரூட்டிலேயே செல்லும் விஜய்

திராவிட கட்சிகள் இலவசங்களை வழங்கி மக்களின் வாக்குகளை கவர்வதாக ஒரு பேச்சு எப்போதும் இருந்து வருகிறது. அக்கட்சிகளை கடுமையாக விமர்சிக்கும் விஜய்யும், தவெக ஆட்சிக்கு வந்தால் ஒரு நிரந்தர வீடு, பைக் என இன்று அறிவித்திருக்கிறார். இந்நிலையில், ‘சர்க்கார்’ படத்தில் இலவச கிரைண்டரை நெருப்பில் வீசிய அதே விஜய் தான், தற்போது இலவசங்களை கையிலெடுப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். உங்கள் கருத்து?
News November 23, 2025
இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் தமிழன்

IND-க்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தெ.ஆப்., வீரர் முத்துசாமி, சர்வதேச முதல் டெஸ்ட் சதத்தை விளாசி அசத்தியுள்ளார். தெ.ஆப்., தற்போது 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 428 ரன்கள் குவித்துள்ளது. IND சார்பில் அதிகபட்சமாக குல்தீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். தெ.ஆப்., 400 ரன்களை கடப்பதற்கு முக்கிய காரணம், தமிழ்நாட்டின் நாகையை பூர்வீகமாக கொண்ட முத்துசாமியின் நிதானமான ஆட்டம்தான்.
News November 23, 2025
தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு

பிஹாரில் 6 மாவட்டங்களில் உள்ள 40 தாய்மார்களின் தாய்ப்பால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்நிலையில், அதில் யுரேனியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்ததன் காரணமாக தாய்ப்பாலில் யுரேனியம் கலந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த தாய்ப்பாலை குழந்தைகள் பருகினால் அவர்களுக்கு புற்றுநோய், நரம்பியல் கோளாறுகள் ஏற்படும் என AIIMS டாக்டர் அசோக் சர்மா எச்சரித்துள்ளார்.


