News November 25, 2024
தமிழகத்தில் புயல் கூண்டு ஏற்றம்!

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தவிர, சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னை எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர், நாகை, தூத்துக்குடி, புதுச்சேரி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
Similar News
News November 27, 2025
கேரள வாக்குச்சீட்டுகளில் தமிழ்

டிச.9, 11 ஆகிய தேதிகளில் கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தில் மொழி சிறுபான்மையினர் வசிக்கும் வார்டுகளில், வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பதற்கான அடையாள சீட்டுகளிலும், வேட்பாளர்களின் பெயர்கள் தமிழ், கன்னடத்தில் இருக்கும் என ECI அறிவித்துள்ளது. குறிப்பாக, திருவனந்தபுரம், பாலக்காடு, வயநாடு, இடுக்கி மாவட்டங்களில் தமிழ் இடம்பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 27, 2025
நவம்பர் 27: வரலாற்றில் இன்று

*மாவீரர் நாள்.
*1895 – நோபல் பரிசுக்கான திட்டத்தை தெரிவித்த ஆல்ஃபிரட் நோபல், தனது சொத்துக்களை அப்பரிசுக்கான மூலதனமாக அறிவித்தார்.
*1940 – புரூஸ் லீ பிறந்தநாள்.
*1977 – துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்.
*1986 – சுரேஷ் ரெய்னா பிறந்தநாள்.
*2008 – முன்னாள் PM வி.பி.சிங் நினைவுநாள்.
News November 27, 2025
டெஸ்லாவின் முதல் முழுநேர சேவை மையம் தொடக்கம்

டெஸ்லா கார் நிறுவனம், இந்தியாவில் முதல் முழுநேர விற்பனை மையத்தை ஹரியானாவில் தொடங்கியுள்ளது. இந்த மையத்தில் கஸ்டமர்கள் ஆலோசனைகள், புக்கிங், டெஸ்ட் டிரைவ் சேவைகளை பெறலாம். முன்னதாக, மும்பை மற்றும் டெல்லியில் அமைக்கப்பட்ட மையங்கள் காட்சிப்படுத்துதல் மையங்களாக மட்டுமே செயல்பட்டு வருகின்றன. டெஸ்லா நிறுவனம் தனது 2 ‘Y’ வேரியண்ட் மாடல்களை மட்டுமே இறக்குமதி செய்து, இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.


