News August 12, 2025
உருவாகிறது புயல் சின்னம்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை

வடமேற்கு வங்கக் கடலில் நாளை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதால், மீனவர்களுக்கு IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று முதல் ஆக., 15 வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் வலுப்பெறும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 7 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News August 12, 2025
திமுகவில் இணைந்த OPS அணி மா.செ., ஆயில் ரமேஷ்!

கரூர் மேற்கு மாவட்ட அதிமுக(OPS அணி) செயலாளர் ஆயில் ரமேஷ் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவரது ஆதரவாளர்கள் 50-க்கும் மேற்பட்டோரும் தங்களை திமுகவில் இணைத்து கொண்டனர். அதேபோல், அதிமுக ஐடி விங் நிர்வாகிகள் சரண்ராஜ், கவின், சிவபாலன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைந்தனர். ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையில் மாற்றுக் கட்சியினர் பலரையும் செந்தில் பாலாஜி திமுகவில் இணைத்து வருகிறார்.
News August 12, 2025
பெண்கள் இறுக்கமாக அணிந்தால்… அலர்ட்

பெண்களின் ஃபேவரைட் உடைகளில் ஒன்றான `ஸ்கின்னி’ ஜீன்ஸ் பேன்ட் அணிவது, கருப்பைத் தொற்று உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இடுப்புப் பகுதியில் வெப்பத்தை இது அதிகரிக்கிறது. மேலும் மாதவிலக்கு பிரச்னைகள், பூஞ்சை தொற்று, சிறுநீர்பாதை தொற்று, தசைகள் – நரம்புகள் சேதமடைதல், நெஞ்செரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்பையும் இது அதிகரிக்கிறதாம்.
News August 12, 2025
3 நாள்கள் தொடர் விடுமுறை.. சிறப்பு ரயில், பஸ்கள் அறிவிப்பு

ஆக.15, 16 மற்றும் 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்வோர் ரயில்கள், பஸ்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தெற்கு ரயில்வே <<17332494>>சிறப்பு ரயில்களை<<>> அறிவித்துள்ளது. அதேபோல், தமிழக அரசும் <<17375212>>சிறப்பு பஸ்களை<<>> அறிவித்துள்ளது. கடைசி நேர சிரமத்தை தவிர்க்கும் வகையில் பலரும் இப்போதே முன்பதிவு செய்து வருகின்றனர். நீங்க பண்ணிட்டீங்களா?