News December 4, 2024
புயல் நிவாரணம்: ரூ.10 லட்சம் அளித்தார் சிவகார்த்திகேயன்

ஃபெஞ்சல் புயல், வெள்ள நிவாரணத்துக்காக தமிழக அரசிடம் நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.10 லட்சம் அளித்துள்ளார். துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து அவர் இதற்கான காசோலையை வழங்கியுள்ளார். முன்னதாக, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் புயல், வெள்ளத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை டி.பி. சத்திரத்தில் மழையால் பாதித்தோருக்கு விஜய் நிவாரணப் பொருள் வழங்கினார்.
Similar News
News September 10, 2025
நேபாளத்துக்கு அடுத்து இந்தியா.. தேதி குறித்த ஜோதிடர்

2039-க்கு பிறகு இந்தியாவில் மக்களாட்சி முடிவுக்கு வரும் என ஜோதிடர் பிரஷாந்த் கினி கணித்துள்ளார். 2039-ல் பாஜக ஆட்சியை இழக்கும் எனவும், அதன்பிறகு நாட்டில் தேர்தலே நடைபெறாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, <<17664211>>நேபாளத்தில்<<>> போராட்டம் வெடித்து ஆட்சி கவிழும் என கடந்த 2023-ம் ஆண்டே கணித்து, சமூக வலைதளத்தில் பதிவிட்டவர் தான் பிரஷாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
News September 10, 2025
நாட்டை விட்டு தப்பியோடிய தலைவர்கள்

இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளின் முக்கிய அரசியல் தலைவர்கள் தற்போது சிறையிலும், நாட்டை விட்டு தப்பி ஓடியும், தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்து வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி, மாணவர்களின் போராட்டங்கள் இத்தகைய தலைவர்களின் அரசியல் வாழ்க்கையை தலைகீழாக மாற்றியுள்ளன. இதனால் தெற்காசிய நாடுகளின் புவிசார் அரசியலே பெரும் மாற்றத்தை சந்தித்துள்ளன. மேலே Swipe செய்து வீழ்ந்த தலைவர்களை தெரிந்துகொள்ளுங்கள்.
News September 10, 2025
நாளை கடைசி: ITI தேர்ச்சி போதும்.. 2,418 பணியிடங்கள்..!

மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள 2,418 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும். ஃபிட்டர், கார்பெண்டர், பெயிண்டர், மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பதாரர்கள் 50% மதிப்பெண்களுடன் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 15 – 24 வயதிற்குள் இருப்பது அவசியம். விண்ணப்பக் கட்டணம் ₹100. விண்ணப்பிக்க விரும்புவர்கள் <