News October 23, 2024
உருவானது ‘டானா’ புயல்

வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 14, 2025
தோல்வின்னு சொல்ல முடியாது: செல்வப்பெருந்தகை

பிஹாரில் MGB கூட்டணி 50 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. குறிப்பாக, காங்., 5 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆனால் இதை தோல்வி என்று சொல்ல முடியாது, வெற்றிவாய்ப்பை இழந்திருப்பதாக சொல்கிறார்கள் என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். தேர்தலின் முழு முடிவை பொறுத்திருந்து பார்ப்போம் என்ற அவர், ஆட்சி, அதிகாரத்தை சுவைக்க நினைக்கும் இயக்கம் காங்., அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
News November 14, 2025
பிஹாரில் சைலண்ட்டாக ஸ்கோர் செய்யும் கட்சி

சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிடும் 29 தொகுதிகளில் 21 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. சீட் பங்கீட்டிங் போது இந்த கட்சிக்கு 29 தொகுதிகளை ஒதுக்கவே பாஜக தயங்கியது. ஏனென்றால் 2020 தேர்தலில் தனித்து போட்டியிட்ட இக்கட்சி 130 தொகுதிகளில் 1 தொகுதியில் மட்டுமே ஜெயித்தது. இந்நிலையில், இந்த தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் 75% வாக்குகளை கவர் செய்து LJP ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
News November 14, 2025
தேஜஸ்வி யாதவ் மீண்டும் முன்னிலை

3-வது சுற்று முடிவில் <<18283085>>1,273 வாக்குகள்<<>> பின்னடைவில் இருந்த தேஜஸ்வி யாதவ், 6-வது சுற்று முடிவில் 219 வாக்குகள் முன்னிலையில் உள்ளார். BJP-யின் சதிஷ் குமார் 23,312 வாக்குகள் பெற்றுள்ளார். குறைவான வாக்கு வித்தியாசமே உள்ளதால், இந்த ரகோபூர் தொகுதி முடிவில் நீண்ட இழுபறி உண்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


