News October 23, 2024

உருவானது ‘டானா’ புயல்

image

வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.

Similar News

News November 25, 2025

பிராமண பெண்கள் குறித்து IAS சர்ச்சை பேச்சு

image

ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்கு கன்னிகாதானம் செய்யும் வரை (அ) காதலிக்கும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும் என ம.பி.,ஐ சேர்ந்த IAS அதிகாரி சந்தோஷ் வர்மா கூறியுள்ளார். IAS அதிகாரியின் கருத்து பிராமண பெண்களை அவமதிப்பதாக உள்ளதாகவும், அவர் மீது FIR போட வேண்டும் எனவும் பிராமண சமாஜ் இயக்கம் வலியுறுத்தியுள்ளது. இல்லையெனில் மாநிலம் தழுவிய போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

News November 25, 2025

புஸ்ஸி, ஆதவ்விடம் CBI துருவி துருவி கேட்ட கேள்விகள்

image

கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் & ஆதவ் அர்ஜுனாவிடம் நேற்று 10 மணி நேரம் CBI விசரணை நடத்தியுள்ளது. இதில், கூட்டத்திற்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர், ஏற்பாடுகளை கவனித்த நிர்வாகிகள் யார், மக்களுக்கு தண்ணீர், சாப்பாடு ஏன் வழங்கவில்லை, ஏன் 12 மணிக்கே விஜய் வருவார் என அறிவித்தீர்கள் என பல கேள்விகளை கேட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் அவர்களிடம் விசாரணை நடக்கவுள்ளது.

News November 25, 2025

புஸ்ஸி, ஆதவ்விடம் CBI துருவி துருவி கேட்ட கேள்விகள்

image

கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த் & ஆதவ் அர்ஜுனாவிடம் நேற்று 10 மணி நேரம் CBI விசரணை நடத்தியுள்ளது. இதில், கூட்டத்திற்கு எந்தெந்த மாவட்டத்தில் இருந்து தொண்டர்கள் வந்திருந்தனர், ஏற்பாடுகளை கவனித்த நிர்வாகிகள் யார், மக்களுக்கு தண்ணீர், சாப்பாடு ஏன் வழங்கவில்லை, ஏன் 12 மணிக்கே விஜய் வருவார் என அறிவித்தீர்கள் என பல கேள்விகளை கேட்டுள்ளனர். இந்நிலையில், இன்று மீண்டும் அவர்களிடம் விசாரணை நடக்கவுள்ளது.

error: Content is protected !!