News October 23, 2024
உருவானது ‘டானா’ புயல்

வங்கக்கடலில் ‘டானா’ புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு, வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இது நடப்பாண்டின் 3வது புயலாகவும், வடகிழக்கு பருவமழை கால முதலாவது புயலாகவும் உருவாகியுள்ளது. வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக வலுப்பெறக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News November 25, 2025
தள்ளிப்போன திருமணம்.. ஸ்மிருதி எடுத்த முடிவு

கொண்டாட்டத்துடன் நடைபெற வேண்டிய ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தையின் உடல்நலக் குறைவால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவரது காதலரான பலாஷ் முச்சலும் அதீத காய்ச்சலால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கஷ்டமான சூழலில், திருமணம் சார்ந்த பதிவுகளை தனது சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து ஸ்மிருதி நீக்கியுள்ளார். எனவே, ‘கவலைப்படாதீங்க மந்தனா’ என நெட்டிசன்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
News November 25, 2025
அதிக ஜனத்தொகை கொண்ட நகரம் எது?

உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாக இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தா உருவெடுத்துள்ளது. சுமார் 4.2 கோடி பேர் அந்நகரத்தில் வசிப்பதாக UN அறிக்கை கூறுகிறது. 3.7 கோடி மக்கள்தொகையுடன் இரண்டாம் இடத்தில் வங்கதேச தலைநகர் டாக்காவும், 3.34 கோடி மக்கள்தொகையுடன் ஜப்பான் தலைநகர் டோக்கியோ மூன்றாம் இடத்திலும் உள்ளன. எனினும், ஜகார்த்தாவில் லட்சக்கணக்கான மக்கள் வீடின்றி வாழ்வதாக கூறப்படுகிறது.
News November 25, 2025
கள்ள ஓட்டுகளை நம்பியுள்ள கட்சி திமுக: ஜெயக்குமார்

கல்வித்தகுதியே இல்லாத சிலர் BLO-க்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிமுகவின் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். SIR பணிகளில் இதுபோன்றோர் எப்படி பணிபுரிவர் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே, அனைத்து BLO-க்களின் தகுதிகளை உள்ளடக்கிய பட்டியலையும் ECI-யிடம் அவர் கேட்டுள்ளார். மேலும், கள்ள ஓட்டுகள், இறந்தவர்களின் வாக்குகளை மட்டுமே திமுக நம்பி இருப்பதால், SIR-ஐ அக்கட்சி எதிர்ப்பதாகவும் விமர்சித்தார்.


