News October 26, 2025
புயல் அலர்ட்: நாளை இங்கு பள்ளிகளுக்கு விடுமுறை

மொன்தா புயல் முன்கூட்டியே இன்று மாலை உருவாகிறது. கனமழை பெய்யும் என்பதால் முதல் மாவட்டமாக புதுவையின் ஏனாமில் அக்.29 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, காஞ்சி, திருவள்ளூர், ராணிப்பேட்டைக்கு மிக கனமழை, விழுப்புரம், செங்கல்பட்டுக்கு கனமழை அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், இந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
Similar News
News January 15, 2026
அல்லு அர்ஜுன் தான் கோலிவுட்டின் அடுத்த உச்சமா?

விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டார், அஜித் ரேஸிங்கில் தீவிரம் காட்டுகிறார். ரஜினி, கமல் சீனியர் ஆகிவிட்டனர். அதனால் தற்போது கோலிவுட்டில் வெற்றிடம் உருவாகி இருக்கிறதாம். இச்சூழலை பயன்படுத்தி, கோலிவுட்டின் அடுத்த உச்ச நடிகராக மாற, அல்லு அர்ஜுன் முயற்சிக்கிறாராம். அதனால்தான், அட்லீ, லோகேஷ் ஆகியோருடன் இணைவதாகவும், அவர்தான் கோலிவுட்டின் அடுத்த உச்சம் என சிலர் கமெண்ட் செய்கின்றனர். நீங்க என்ன சொல்றீங்க?
News January 15, 2026
தமிழர் இல்லங்களில் பொங்கட்டும் இன்ப பொங்கல்

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழக மக்களுக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன். தமிழர் உள்ளங்களிலும் இல்லங்களிலும் பொங்கிடும் இந்த மகிழ்ச்சிப் பொங்கல், பன்மடங்காக பெருகும் எனவும் வாழ்த்து கூறி, வெல்வோம் ஒன்றாக! குறிப்பிட்டுள்ளார்.
News January 15, 2026
பொங்கலன்று கண்டிப்பாக இவற்றை மறக்காதீங்க!

பொங்கல் பண்டிகையில், சூரிய பகவானுக்கு உரித்தான கோதுமையை தானம் கொடுங்கள் *சூரிய பகவானுக்கு இட்லி பூ, செம்பருத்திப் பூவை சமர்ப்பணம் செய்வது சிறப்பான பலன்களை அளிக்கும் *உடன் பிறந்தவர்களுக்கு, சகோதர சகோதரிகளுக்கு முடிந்த சீர்வரிசையை செய்யுங்கள் *இந்த தைத்திருநாளில், தெரிந்த குழந்தைகளிடம் பொங்கல் வாழ்த்து சொல்லி, அவர்களிடம் ஒரு ₹10-ஐ கொடுங்கள். இந்த வருடம் செல்வ வளம் இரட்டிப்பாகும். SHARE IT.


