News July 6, 2024
7,347 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 7,347 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. அவற்றில் 2,500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், திண்டுக்கல், சேலம், மதுரை, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
Similar News
News September 23, 2025
தூங்காமல் நான் காணும் சொப்பனமே..

சில்லென்று காற்றாய் வந்து, கனவாய் கலைந்த சில்க் ஸ்மிதாவுக்கு இன்று பிறந்தநாள். நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில், அந்தக்கால 80ஸ் கிட்ஸ்களுக்கு மட்டுமல்ல, 90ஸ் கிட்ஸ், 2K கிட்ஸ் என ஜெனரேஷன் கடந்தும் கனவுக்கன்னியாக இருக்கிறார் சில்க். தென்னிந்தியா சூப்பர் ஸ்டார்கள் பலரும் இவரின் கால்ஷீட்டுக்காக தவம் கிடந்த காலமும் உண்டு. உங்களுக்கு பிடித்த சில்க் ஸ்மிதா பாட்டு எது? வாழ்த்தை Likes-ஆக கொடுங்க.
News September 23, 2025
AI-ஆல் பெண்களுக்கு தான் அதிக பாதிப்பா!

AI-ஆல் ஆண்களை விட பெண்கள் வேலையிழக்கும் அபாயம் அதிகம் என ஐநா தெரிவித்துள்ளது. தொழில்நுட்பத்துறையில் பெண்களின் 28% வேலைகளும், ஆண்களின் 21% வேலைகளும் AI-ஆல் செய்யமுடியும். இதற்கு, இத்துறையில் பெண்கள் குறைவாக இருப்பதும் முக்கிய காரணமாக இருக்கிறது. இந்நிலை தொடர்ந்தால், 2030-க்குள் 34.3 கோடி பெண்கள் பாதிக்கப்படலாம். எனவே, இந்த பாலின பாகுபாடை உடனடியாக சரி செய்ய ஐநா வலியுறுத்தியுள்ளது.
News September 23, 2025
RECIPE: குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம்!

குதிரைவாலி அரிசி, இட்லி அரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து 2 மணி நேரம் ஊற வைத்து அரைக்கவும் *இளநீரை புளிக்க வைத்து மாவில் சேர்த்து, 6 மணி நேரம் புளிக்க வைக்கவும் *கருப்பட்டியை கரைத்து அடுப்பில் வைத்து கொதித்ததும், வடிகட்டி மாவில் சேர்க்கவும் *இந்த மாவை ஓரங்களில் முறுகலாகவும், நடுவில் பஞ்சு போன்றும் சுட்டு எடுத்தால், சுட சுட குதிரைவாலி- கருப்பட்டி ஆப்பம் ரெடி. SHARE.