News March 30, 2024
59,000 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

நாடு முழுவதும் கடந்த 2022-23ல் 59,000 சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. இதில் 17 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 9,551 திருமணங்கள் சட்ட ரீதியாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் 49,813 திருமணங்கள், கவுன்சிலிங், விழிப்புணர்வு மூலம் தடுக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக பீஹாரில் 31% சிறார் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. 4ல் 1 திருமணங்கள், 10-14 வயது சிறுமிகளுக்கு நடக்க இருந்தவை.
Similar News
News March 11, 2026
பலாத்காரத்தால் 42 ஆண்டுகள் கோமாவில் இருந்த பெண்

நாட்டிலேயே முதல்முறையாக, 13 ஆண்டுகள் கோமாவில் இருந்த <<19352666>>ஹரிஷை<<>> கருணைக்கொலை செய்ய SC இன்று அனுமதி வழங்கியது. இதற்கு முன்பு நடந்த கருணைக் கொலை வழக்கு பற்றி உங்களுக்கு தெரியுமா? 1973-ல் பாலியல் வன்கொடுமையால் கோமாவுக்கு சென்ற அருணாவை கருணைக்கொலை செய்ய அனுமதி 2011-ல் கோரப்பட்டது. அவர் 42 ஆண்டுகளாக கோமாவில் இருந்தும், கோர்ட் அதை ஏற்கவில்லை. இறுதியில் 2015-ல் நிமோனியா காய்ச்சலால் அவர் இயற்கை மரணமடைந்தார்.
News March 11, 2026
Fridge-ல் மறந்தும் இவற்றை வெச்சுராதீங்க..

பொதுவாக காய்கறிகள், சமைத்த உணவுகளை Fridge-ல் வைத்து பயன்படுத்துவோம். எதை வைக்கலாம், எதை வைக்கக்கூடாது என்பது கூட தெரியாமல், பல நாள்களுக்கு வைத்திருந்து பயன்படுத்துவோம். ஆனால், சில உணவுகளை Fridge-ல் கண்டிப்பாக வைக்கவே கூடாது. அவை என்னென்ன பொருள்கள் என்பதை தெரிந்து கொள்ள, மேலே கொடுக்கப்பட்டுள்ள போட்டோஸை வலது பக்கம் Swipe பண்ணி பாருங்க. அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.
News March 11, 2026
வங்கி கணக்கில் மேலும் ₹1,000.. ரங்கசாமி அறிவித்தார்

புதுச்சேரியில் மார்ச் 9-ம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ₹5,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தை CM ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி, புத்தகப் பை, காலணி வாங்குவதற்காக 80,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பெற்றோர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் இத்திட்டம் வேண்டுமா?


