News April 25, 2025

போரை நிறுத்துங்கள்.. புடினிடம் வலியுறுத்திய ட்ரம்ப்!

image

உக்ரைனை உடனான போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என ரஷ்ய அதிபர் புடினிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவிட்ட அவர், கீவ் நகர் மீதான ரஷ்யாவின் தாக்குதல் வருத்தமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘மிகவும் மோசமான நேரம். புதின் நிறுத்துங்கள். போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளலாம்’ எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News

News December 8, 2025

கள்ளக்குறிச்சியில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு

image

ராயர்பாளையத்தை சேர்ந்த கோவிந்தன் கடந்த 3-ம் தேதி முதல் காணவில்லை அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்காத நிலையில் நேற்று இரவு அவரது மகன் அஜித் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் தண்ணீர் இறைப்பதற்காக கிணற்றை பார்த்தபோது அவர் சடலமாக கிணற்றில் மிதந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக அவரது சடலம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது

News December 8, 2025

ஹைதராபாத்தில் டொனால்ட் டிரம்ப் சாலை!

image

ஹைதராபாத்தில், USA துணை தூதரகம் அமைந்துள்ள உள்ள சாலைக்கு ‘டொனால்ட் ட்ரம்ப் அவென்யூ’ என பெயரிட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. மேலும், புதிதாக அமைக்கப்பட உள்ள பசுமைவெளி சாலைக்கு மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் பெயர் சூட்டப்பட உள்ளது. ஏற்கெனவே சாலைகளுக்கு <<18292123>>கார்பரேட் நிறுவனங்களின்<<>> பெயர்கள் சூட்டப்பட உள்ளதாக CM ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தன் ஒருபகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

News December 8, 2025

இந்து, இந்தியா என பிரித்து பேசலாமா? சீமான்

image

‘இந்திய மக்களின் ஒற்றுமை’ என சொல்லாமல் ‘இந்து சமுதாயத்தின் ஒற்றுமை’ என அமித்ஷா சொல்வது கவலையளிப்பதாக சீமான் பேசியுள்ளார். நாட்டை வழிநடத்தும் அரசு, இந்தியர்களின் ஒருமைப்பாட்டை பற்றி பேசவேண்டும் என்ற அவர், இந்துவுக்கு ஒரு கனவு, இந்தியாவுக்கு ஒரு கனவு என்று பிரித்து பேசமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், அம்பேத்கர் நினைவு நாளில் பாஜக நடத்தும் அமைதி பேரணி கூட சந்தேகங்களை கிளப்புவதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!