News April 25, 2024
தீர்ப்பு வரும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும்!

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் பிறகும் கூட வடலூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 13, 2026
நீலகிரி: ரூ.5 லட்சம் வரை காப்பீடு!

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நீலகிரி கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். (SHARE)
News January 13, 2026
₹72 கோடி கொடுப்பதால் ‘கைதி 2’-ஐ ஓரங்கட்டினாரா லோகேஷ்?

சூர்யாவுக்கு சொன்ன ‘இரும்புக்கை மாயாவி’ கதையை அல்லு அர்ஜுனுக்கு சொல்லி லோகேஷ் ஓகே வாங்கியதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், அப்படத்தில் அவருக்கு ₹72 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், அடுத்த ஒரு மாதத்திற்குள் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சம்பளம் கொடுக்கப்படுவதால் தான் ‘கைதி 2’ படத்தை அவர் ஓரங்கட்டியதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.
News January 13, 2026
அதிமுக வேட்பாளர் தேர்வில் இபிஎஸ் போடும் பிளான்!

அதிமுகவில் போட்டியிட விருப்பமனு கொடுத்தவர்களிடம் EPS விறுவிறுப்பாக நேர்காணல் நடத்தி வருகிறார். அதில், தொகுதியில் உள்ள செல்வாக்கு, குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதா, கடந்த காலங்களில் கட்சிக்காக ஆற்றிய பணி உள்ளிட்டவைகள் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறாராம். குறிப்பாக, திமுகவின் விமர்சனத்திற்கு ஆளாகாத வகையில் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளாராம்.


