News April 25, 2024
தீர்ப்பு வரும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்த வேண்டும்!

உயர் நீதிமன்றத் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில், வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டது. அதன் பிறகும் கூட வடலூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது எனக் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News November 13, 2025
பாமக பிரச்னைக்கு இதுதான் தீர்வு: பாமக பாலு

G.K.மணி உள்ளிட்டோர் ராமதாஸை தவறாக வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள் என்று வழக்கறிஞர் பாலு குற்றஞ்சாட்டியுள்ளார். மாம்பழம் சின்னம் கோரி தேர்தல் ஆணையத்துக்கு ராமதாஸ் தரப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் பல தவறுகள் இருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், ஜி.கே.மணியும், அருளும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தால் போதும், பாமகவில் உள்ள பிரச்னைகள் அனைத்தும் உடனே முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.
News November 13, 2025
TET தேர்வுக்கான ஹால்டிக்கெட் எடுப்பதில் சிக்கல்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான தாள்-1 தேர்வு வரும் 15-ம் தேதியும், தாள்-2 தேர்வு 16-ம் தேதியும் நடைபெற உள்ளது. இந்நிலையில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்கள் ஏற்பட்டிருப்பதாக தேர்வர்கள் குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமாக ஹால்டிக்கெட்டின் பாஸ்வேர்டை மறந்தவர்கள், OTP எண் மூலம் அதை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை என புகார் அளித்துள்ளனர்.
News November 13, 2025
அதிமுகவில் இருந்து நீக்கினார்

கிருஷ்ணகிரி அதிமுக முக்கிய நிர்வாகியும், கவுன்சிலருமான நாகஜோதியை கட்சியிலிருந்து நீக்கி EPS அறிவித்துள்ளார். கிருஷ்ணகிரி நகராட்சி சேர்மன் பரிதா நவாப்புக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அவருக்கு ஆதரவாக நாகஜோதி வாக்களித்தார். திமுகவை சேர்ந்த பரிதா நவாப்பின் பதவியை சொந்த கட்சியினரே பறித்தனர். வரும் தேர்தலில் கிருஷ்ணகிரியில் கட்டாயம் வெற்றி பெற திமுகவினருக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.


