News March 21, 2024
புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News March 19, 2026
அண்ணன் சீர் சொந்த பணத்தில் கொடுங்கள்: சீமான்

நாதக தேர்தல் அறிக்கை வெளியீட்டின்போது விஜய்யை சீமான் விமர்சித்து பேசியுள்ளார். என் தம்பி அறிவித்த இலவசங்களுக்கே மாதம் ₹1 லட்சம் கோடி தேவைப்படுகிறது. இப்பணத்தை எங்கிருந்து கொடுப்பீர்கள் என கேள்வி எழுப்பினார். அண்ணன் சீர், மாமன் சீர் என அனைத்தையும் சொந்த பணத்தில் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். 1 பவுன் தங்கம், பட்டு சேலை அடங்கிய அண்ணன் சீர் திட்டத்தை விஜய் வாக்குறுதியாக அளித்துள்ளார்.
News March 19, 2026
இனி பிரச்னை இல்லை.. வந்தாச்சு GAS ATM!

ஹரியானாவின் குருகிராமில் BPCL நிறுவனம், GAS ATM-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. கேஸ் கனெக்ஷனில் உள்ள போன் நம்பர் கொடுத்து, பணம் செலுத்தி, காலி சிலிண்டரை கொடுத்தால் புது சிலிண்டர் கிடைக்கிறது. வழக்கமாக கிடைக்கும் 30 கிலோ சிலிண்டர்கள் இங்கு கிடைப்பதில்லை. மாறாக, 15 கிலோ மட்டுமே எடை கொண்ட Fiber சிலிண்டர்கள் தான் கிடைக்குமாம். அதனால் தூக்கிட்டு போவதும் ஈசி. நம்மூரிலும் வந்தா நல்லா இருக்கும்ல?
News March 19, 2026
பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை.. மாணவர்கள் HAPPY

தேர்தல் காரணமாக பள்ளிகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.24 வரை முழு ஆண்டு தேர்வுகள் நடத்த முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஏப்.23-ல் தேர்தல் நடைபெற இருப்பதால், முன்கூட்டியே (ஏப்.17-க்குள்) முழு ஆண்டுத் தேர்வுகளை முடிக்க தற்போது ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். இதனால், மாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் கோடை விடுமுறை கிடைக்கும். SHARE IT


