News March 21, 2024
புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News December 17, 2025
6 குழந்தைகளுக்கு HIV: மீண்டும் அதிர்ச்சி சம்பவம்

ம.பி., சத்னா மாவட்ட ஹாஸ்பிடலில், தாலசீமியாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ஒட்டுமொத்த நாட்டையும் அதிர வைத்துள்ளது. <<18106277>>ஜார்கண்ட்<<>> போல, இங்கேயும் குழந்தைகளுக்கு HIV தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ள நிலையில், விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், விரைந்து நடவடிக்கை எடுக்க பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
News December 17, 2025
சுப்மன் கில் OUT.. பிளேயிங் 11 மாற்றமா?

SA-வுக்கு எதிரான 4-வது டி20-ல், கில்லுக்கு பதிலாக சாம்சனுக்கு வாய்ப்பு தர வேண்டும் என கைஃப், பத்ரிநாத் உள்ளிட்டோர் கூறியுள்ளனர். கடந்த 18 டி-20 போட்டிகளில், கில் ஒன்றில் கூட 50 அடிக்கவில்லை. நடப்பு தொடரிலும் 4(2), 0(1), 28(28) என 32 ரன்களே எடுத்துள்ளார். டி-20 WC-க்கு 2 மாதங்களே உள்ளதால், கில்லுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. பிளேயிங் 11-ல் யார் இடம்பெறணும்?
News December 17, 2025
பனீர் சாப்பிட பிடிக்குமா.. கொஞ்சம் கவனியுங்க!

இந்தியாவில் 83% போலியான பனீரே விற்கப்படுகின்றன என்ற ஷாக்கிங் தகவலை FSSAI தெரிவித்துள்ளது. இது மைதா, ArrowRoot powder, Urea ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறதாம். பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலியானது. அதுவே ஒரிஜினலாக இருந்தால், அது பனீர் மீது படிமமாக தேங்கி நின்றுவிடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.


