News March 21, 2024
புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தம்

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், புதிய ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. அதே போல், தேர்தல் நடத்தை விதிகளும் அமலுக்கு வந்துள்ளன. இதனால் புதிய ரேஷன் அட்டைகள் வழங்குவதை உணவு வழங்கல் துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
Similar News
News December 25, 2025
தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. அதிரடி கைது

கடலூர் திட்டக்குடி அருகே நிகழ்ந்த பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டிவைடரில் மோதி எதிரே வந்த கார்கள் மீது மோதியதில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில், பஸ் டிரைவர் தாஹா அலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.
News December 25, 2025
சிவப்பு நிறத்தைக் கண்டால் காளைகள் தாக்குமா?

காளைகளுக்கு சிவப்பு நிறம் பிடிக்காதா? உண்மையில் அவற்றுக்கு சிவப்பு நிறத்தின் மீது எந்த வெறுப்பும் இல்லை. காளைகளின் கண்களுக்கு சிவப்பு நிறம் தெரியாது. மாறாக அது வேறு நிறங்களில் தெரியும். எனவே, காளைகளுக்கு நிறங்களின் மீது எந்த கோபமும் கிடையாது. அவை, வேகமாக அசைவுகளை மட்டுமே தாக்குகின்றன. வெள்ளை நிற துணியை, அவற்றின் முன் வேகமாக அசைத்தாலும் தாக்கும். இந்த உண்மையை SHARE பண்ணுங்க.
News December 25, 2025
தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்

1979-க்கு பிறகு ஒரே ஆண்டில் தங்கம் விலை 70% உயர்ந்துள்ளது. இந்நிலையில், இந்த விலை உயர்வு அடுத்த ஆண்டும் தொடரும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இன்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ் (28g) தங்கம் விலை $4,493.76 ஆக இருக்கும் நிலையில், 2026 முடிவில் இது $5,000 ஆக மாறும் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சர்வதேச அரசியல், பொருளாதார சூழல்களை பொறுத்து இது மாறும்.


