News April 1, 2025
3 நாள் STOP பண்ணுங்க… அதிசயம் நடக்கும்!

தொடர்ந்து ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் ஒரு 3 நாள்களுக்கு, போன் பயன்படுத்துவதை நிறுத்தினால், ஆச்சரியகரமான மாற்றம் ஏற்படுவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இளைஞர்கள் சிலரை 72 மணிநேரம் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதை நிறுத்தி சோதித்தனர். அப்போது அவர்களின் மூளை அதிசயிக்கத்தக்க முறையில் தன்னைத் தானே ரீபூட் செய்துகொண்டு சிறப்பாக செயல்பட்டதை கண்டறிந்தனர். நீங்களும் ட்ரை பண்ணலாமே?
Similar News
News April 3, 2025
வக்ஃபு விவகாரம்.. காங். MLA மரண எச்சரிக்கை

வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறினால் உயிரை மாய்த்து கொள்வேன் என பீகார் காங். MLA இஷார்குல் ஹுசைன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது சிறுபான்மையினருக்கு எதிரான பிரச்னை மட்டும் அல்ல, அடுத்ததாக குருத்வாரா, தேவாலயங்கள், கோயில்களின் நிலங்களை கைப்பற்ற அரசு இதுபோன்றதொரு மசோதாவை கொண்டுவரும் எனவும் அவர் கூறியுள்ளார். முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசை திருப்பவே இப்படி செய்வதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News April 3, 2025
இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட கார் இதுதான்

இந்தியாவில் அதிக பயணிகள் வாகனங்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் மாருதி சுசூகி முதலிடத்தில் உள்ளது. நடப்பு நிதியாண்டில் மட்டும் 17.60 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. அதற்கு அடுத்ததாக ஹுண்டாய் 5.98 லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக 1.98 லட்சம் பேர் மாருதி சுசூகி வேகன் ஆர் காரை வாங்கியுள்ளனர். 1.96 லட்சம் பேர் டாடா பன்ச் காரை வாங்கியுள்ளனர்.
News April 3, 2025
கர்நாடகாவில் பைக் டாக்சிக்கு தடை விதிக்க ஐகோர்ட் உத்தரவு

கர்நாடகாவில் 6 வாரங்களுக்குள் ரேபிடோ, ஊபர் உள்ளிட்ட நிறுவனங்களின் பைக் டாக்சி சேவைக்கு தடை விதிக்க அந்த மாநில ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் டாக்சி இயக்குதலுக்கான தனி விதிகள், வழிகாட்டுதல்களை உருவாக்கவும் கர்நாடக அரசுக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. அதேபோல், பைக் டாக்சிக்கான உரிய சட்டங்கள் வரும்வரை பைக்குகளை வணிக போக்குவரத்து வாகனமாக இயக்க அனுமதி வழங்க உத்தரவிட முடியாது எனவும் கூறியுள்ளது.