News June 7, 2024

வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசி தாக்குதல்

image

திருச்சூரில் வந்தே பாரத் ரயில் மீது கற்கள் வீசப்பட்டதில், ரயிலின் சி2 மற்றும் சி4 பெட்டிகளின் கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவம் ரயில் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தாக்குதல் நடத்திய நபரை ரயில்வே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதற்கு முன்பும், கேரளாவில் வந்தே பாரத் ரயில் மீது கற்களை வீசிய சம்பவம் நடந்துள்ளது.

Similar News

News September 24, 2025

PhonePe, CRED-ல் இனி இந்த சேவையை பெற முடியாது

image

PhonePe, CRED போன்ற ஃபின்டெக் செயலிகளை பயன்படுத்தி, கிரெடிட் கார்டு மூலம் வாடகை செலுத்தும் அம்சம் தற்போது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டு உரிமையாளர்களின் அடையாளங்கள் முழுமையாக சரிபார்க்கப்படாமல் இருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், RBI-ன் புதிய விதி, மேற்கூறிய சேவையை நிறுத்தியுள்ளது. இனி நெட்பேங்கிங், UPI, NEFT மற்றும் காசோலை மூலம் மட்டுமே வாடகை செலுத்த முடியும்.

News September 24, 2025

இரவில் செய்யக்கூடாத விஷயங்கள்

image

இரவு நேரம் என்பது உடல் புத்துணர்வு ஏற்படும் நேரமாக இருக்க வேண்டும். இதற்கு நல்ல தூக்கம் தேவை. சில சின்ன சின்ன செயல்களை தவிர்ப்பது இரவு எந்த தொந்தரவும் இல்லாமல் தூங்க உதவியாக இருக்கும். எதையெல்லாம் செய்ய வேண்டாம் என்று மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உங்களுக்கு தெரிந்தால் கமெண்ட்ல சொல்லுங்க.

News September 24, 2025

BJP TN-க்கு பிரச்னை கொடுக்க இதுதான் காரணம்: உதயநிதி

image

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் ரோல் மாடலாக CM ஸ்டாலின் உள்ளதாக உதயநிதி தெரிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி அடைந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதாக கூறிய அவர், இதனால்தான் மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு பிரச்னைகளை கொடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். பாஜகவை எதிர்த்து போராடக்கூடிய ஒரே தலைவர் ஸ்டாலின் மட்டும்தான் எனவும் கூறியுள்ளார்.

error: Content is protected !!