News April 15, 2025

பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 500 புள்ளிகள் உயர்ந்து 23,328 புள்ளிகளை தொட்டது. சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்ந்து 76,734 புள்ளிகளை கடந்தது. சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்ந்திருப்பது இந்திய சந்தைகளுக்கும் சாதகமாக மாறியிருக்கிறது.

Similar News

News January 18, 2026

திமுக – காங்., ஒருவரை ஒருவர் முடித்துக்கொள்வர்: தமிழிசை

image

திமுக- காங்., இடையே நம்பிக்கையில்லை என தமிழிசை தெரிவித்துள்ளார். அவர்களிடையே கூட்டணி தொடருமா என்பதை சொல்ல முடியவில்லை என்ற அவர், 1967-ல் காங்கிரஸை திமுக முடித்தது; இப்போது ஒருவரை ஒருவர் முடித்துக் கொள்வார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார். மேலும், தமிழகத்தில் அநீதியும் முடிந்துபோகும், மிகவும் மோசமான ஆட்சியும் முடிந்துபோகும். 2026 NDA கூட்டணிக்கானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றார்.

News January 18, 2026

வெற்றிக் கூட்டணியை பாமக அமைக்கும்: ராமதாஸ்

image

விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் தேர்தல் வியூகம் குறித்து பாமகவின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், பாமக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக அமையும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுதான் நாணயமான கூட்டணி என மக்கள் பேசுகின்ற அளவிற்கு கூட்டணி அமையும் என்றும், அப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்க தீவிரமாக முயன்று வருவதாகவும் கூறியுள்ளார்.

News January 18, 2026

தமிழ் திரைப்பட எடிட்டர் காலமானார்

image

‘டிஷ்யூம்’, ‘ரோஜாக்கூட்டம்’ ஆகிய படங்களில் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பீட்டர் பாபியா (58) காலமானார். நெஞ்சுவலியால் சிகிச்சை பெற்றுவந்த பாபியா, அவரது சொந்த ஊரான சேலம் அஸ்தம்பட்டியில் பஸ்ஸில் பயணித்துள்ளார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பின்னர், ஹாஸ்பிடல் சென்றபோது அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். பாபியாவின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

error: Content is protected !!