News April 15, 2025

பங்குச்சந்தைகள் கிடுகிடுவென உயர்வு

image

இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஜெட் வேகத்தில் உயர்ந்ததால், முதலீட்டாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். வர்த்தக நேர முடிவில், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி இன்று 500 புள்ளிகள் உயர்ந்து 23,328 புள்ளிகளை தொட்டது. சென்செக்ஸ் 1,577 புள்ளிகள் உயர்ந்து 76,734 புள்ளிகளை கடந்தது. சர்வதேச சந்தைகள் அனைத்தும் உயர்ந்திருப்பது இந்திய சந்தைகளுக்கும் சாதகமாக மாறியிருக்கிறது.

Similar News

News April 18, 2025

கோடை விடுமுறை.. வெளியூர் செல்வோருக்கு சிறப்பு சலுகை

image

கோடை கால விடுமுறைக்கு வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு TNSTC சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. ஆம்! ஆன்லைன் முன்பதிவு திட்டத்தின் வழியாக முன்பதிவு செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், பயணச்சீட்டு முன்பதிவு செய்து, 01/04/2025 முதல் 15/06/2025 வரை பயணம் மேற்கொள்ளும் பயணிகளில், 75 பயணிகளை கணினி சிறப்பு குலுக்கல் முறையில் தேர்வு செய்து சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

News April 18, 2025

எலைட் லிஸ்டில் இணைந்த ரோஹித் பாய்!

image

மும்பை இந்தியன்ஸ் ஸ்டார் வீரர் ரோஹித் ஷர்மா, எலைட் லிஸ்டில் இணைந்துள்ளார். ஒரு மைதானத்தில் (மும்பை வான்கடே) 100க்கும் அதிகமான சிக்ஸர்களை விளாசிய 4ஆவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இந்த பட்டியலில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் 130 சிக்ஸர்கள் அடித்து கோலி முதல் இடத்திலும், 127 சிக்ஸர்களுடன் கிறிஸ் கெயில் 2ஆம் இடத்திலும், 118 சிக்ஸர்களுடன் ஏபி டிவில்லியர்ஸ் 3ஆம் இடத்திலும் உள்ளனர்.

News April 18, 2025

ஐகோர்ட் உத்தரவால் பொன்முடிக்கு நெருக்கடி

image

பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய <<16130005>>பொன்முடி <<>>மீது வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவிட்டது. ஏற்கெனவே, இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. ஒருவேளை போலீசார் வழக்குப்பதிவு செய்தால், அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்கும். இது தேர்தல் நேரத்தில் திமுகவுக்கு பெரும் நெருக்கடியாக மாறும்.

error: Content is protected !!