News April 1, 2025
நிதியாண்டின் முதல் நாளே பங்குச் சந்தைகள் சரிவு!

இந்திய பங்குச் சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்செக்ஸ் 902 புள்ளிகள் சரிந்து 76,512 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல், நிஃப்டி 205 புள்ளிகள் குறைந்து 23,313 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அமெரிக்காவின் புதிய வரி விதிப்புகள் நாளை(ஏப்.2) முதல் அமலுக்கு வருவது உள்ளிட்டவையே இந்த வீழ்ச்சிக்கு காரணம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 2, 2025
என்னடா நடக்குது இங்க!

நடப்பு ஐபிஎல் தொடர் விசித்திரமாக நடைபெற்று வருகிறது. தற்போதைய புள்ளிப்பட்டியலின்படி, முதல் 4 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக ஒரே ஒரு IPL கோப்பையை (GT) மட்டுமே வென்றிருக்கிறது. ஆனால், கடைசி 6 இடங்களில் இருக்கும் அணிகள் மொத்தமாக 15 கோப்பைகளை வென்றிருக்கின்றன. அதாவது, சூப்பர்ஸ்டார் அணிகள் அனைத்தும் இந்தமுறை வீழ்ச்சியை கண்டுள்ளன.
News April 2, 2025
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

சற்றுமுன் ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. க்யூஷு தீவில் 6.2 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. நான்கு தினங்களுக்கு முன் மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 3000 பேர் உயிரிழந்தனர். அந்த சோகத்தில் இருந்து உலகம் இன்னும் மீள்வதற்கு முன் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
News April 2, 2025
BREAKING: குஜராத் அணிக்கு 170 ரன்கள் இலக்கு

ஐபிஎல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 170 ரன்களை வெற்றி இலக்காக ஆர்சிபி நிர்ணயித்துள்ளது. பெங்களூரில் நடக்கும் இப்போட்டியில் முதலில் ஆர்சிபி பேட்டிங் செய்தது. நட்சத்திர வீரர் கோலி 7 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், மற்ற வீரர்கள் அதிரடி காட்டினர். இதனால் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆர்சிபி அணி 169 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக லிவிங் ஸ்டோன் 40 பந்துகளில் 54 ரன்களை விளாசினார்.