News February 11, 2025

ரத்தக் களறியில் பங்குச்சந்தைகள்

image

இந்திய பங்குச்சந்தைகள் சரிவினை சந்தித்து வரும் நிலையில், சிறிய நிறுவனங்கள் கடுமையான சரிவைக் கண்டிருக்கின்றன. குறிப்பாக, வோடஃபோன் நிறுவனம் 54%, ஹிந்துஸ்தான் ஜிங்க் 49%, HUDCO 46%, CPCL 61%, ரேமண்ட் 58% சரிந்திருக்கிறது. இது முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்நிய முதலீட்டாளர்கள் சுமார் 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயை இந்திய சந்தையில் இருந்து வெளியே எடுத்துள்ளனர்.

Similar News

News February 11, 2025

எந்த நாட்டில் எவ்வளவு பில்லினியர்கள்?

image

எந்த நாட்டில் எத்தனை பேர் ₹8,700 கோடிக்கு மேல் ($1 பில்லியன்) சொத்து வைத்திருக்கின்றனர் என்று பார்க்கலாம்.
அமெரிக்கா – 813 பேர்
சீனா – 406 பேர்
இந்தியா – 200 பேர்
ஜெர்மனி – 132 பேர்
ரஷ்யா – 120 பேர்
இத்தாலி – 73 பேர்
பிரேசில் – 69 பேர்

News February 11, 2025

த்ரிஷா சொல்வது உண்மையா? பொய்யா!

image

புதிய மோசடி ஒன்று பரவுவதை பாப் பாடகர் கான்யே வெஸ்ட் சுட்டிக் காட்டியிருந்தார். பிரபலங்கள் சம்மந்தம் இல்லாத பொருளை சோசியல் மீடியாவில் ப்ரமோட் செய்வார்கள். பின்னர், அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டதாக விளக்கம் கொடுப்பார்கள். இதற்கு பெரிய சன்மானம் கிடைக்கும். த்ரிஷாவும் அப்படியான உத்தியை கையில் எடுத்தாரா அல்லது <<15430809>>X பக்கம் உண்மையிலேயே ஹேக் ஆனதா<<>> என்று ரசிகர்கள் குழம்புகின்றனர்.

News February 11, 2025

JEE தேர்வில் 14 பேர் சதம்

image

JEE மெயின்ஸ் தேர்வுக்கான முடிவுகளை சற்றுமுன் NTA வெளியிட்டது. அதில், 14 பேர் நூற்றுக்கு நூறு எடுத்து சாதனை படைத்துள்ளனர். ஆனால், இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இல்லை. ராஜஸ்தானைச் சேர்ந்த 5 பேர் 100 மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். IIT, NIT போன்ற நாட்டின் உயர்ந்த கல்லூரிகளில் சேர்வதற்கு இந்த JEE மதிப்பெண்கள் உதவுகின்றன. மெயின்ஸ் தேர்வைத் தொடர்ந்து மாணவர்கள் Advanced தேர்வு எழுத வேண்டும்.

error: Content is protected !!