News April 15, 2025

உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

image

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

Similar News

News January 1, 2026

EPS, OPS ஒன்று சேரணும்: நயினார்

image

‘அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்’ என்ற கட்சியை தொடங்கியுள்ள OPS, EPS-வுடன் இணையவே மாட்டேன் என்று சமீபத்தில் தொண்டர்கள் மத்தியில் கொந்தளித்து பேசியிருந்தார். இதனால், அவர் எந்த கூட்டணிக்கு செல்லப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், வரும் தேர்தலை கருத்தில் கொண்டு, EPS – OPS கண்டிப்பாக மீண்டும் ஒன்று சேர வேண்டும் என நயினார் வலியுறுத்தியுள்ளார்.

News January 1, 2026

BREAKING: அரசு பஸ் கோர விபத்து.. புத்தாண்டில் சோகம்

image

புத்தாண்டு நாளில் அரசு பஸ் மோதி 2 பேர் உயிரிழந்த துயர சம்பவம் அரியலூர் அருகே நடந்துள்ளது. சென்னையில் இருந்து துறையூர் சென்று கொண்டிருந்த அரசு பஸ், நல்லாம்பாளையம் பகுதியில் கார் மீது மோதியது. இதில், காரில் இருந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 1, 2026

உடல் சோர்வாக இருக்கிறதா? இதை சாப்பிடுங்க!

image

நீங்கள் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால், உடலில் ஊட்டச்சத்து குறைபாடுகள் காரணமாக இருக்கலாம். இந்த உணவுகள் இயற்கையாகவே சோம்பலை நீக்கி, உங்கள் உடலுக்கும் மனதிற்கும் ஆற்றல் அளிக்க உதவுகின்றன. அவை எந்தெந்த உணவுகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

error: Content is protected !!