News April 15, 2025

உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

image

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

Similar News

News January 9, 2026

வட்டி விகிதங்களை குறைத்தது HDFC

image

அண்மையில் ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருந்தது. இந்நிலையில் கடன்களுக்கான MCLR வட்டி விகிதம் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளதாக HDFC அறிவித்துள்ளது. இதன் மூலம், கடன்களின் கால அளவைப் பொறுத்து வட்டி விகிதம் 8.25% முதல் 8.55% வரை இருக்கும். இதன் மூலம், அடுத்தடுத்த EMI-கள் சற்று குறைக்கப்படும். இது இம்மாதம் 7-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளதாக HDFC தெரிவித்துள்ளது.

News January 9, 2026

விஜய்க்கு நெருக்கடி தரவில்லை: H.ராஜா

image

கரூர் துயரத்தில் 41 பேர் பலியான போது மத்திய அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட்டதாக H.ராஜா தெரிவித்துள்ளார். விஜய்க்கு CBI சம்மன் அனுப்பியது குறித்த கேள்விக்கு, நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் விஜய்யால் வெளியே வந்திருக்க முடியாது என H.ராஜா கூறினார். மேலும், ஒருவரின் பலவீனத்தை கையில் எடுத்து நெருக்கடி கொடுப்பதில்லை என்றும், கோர்ட் தீர்ப்பின் அடிப்படையிலேயே CBI விசாரணை நடப்பதாகவும் குறிப்பிட்டார்.

News January 9, 2026

பனங்கிழங்கில் இவ்வளவு மருத்துவ குணங்களா?

image

பொங்கலையொட்டி தமிழகத்தில் பனங்கிழங்கு விற்பனையும் சூடுபிடிக்கும். அத்தகைய பனங்கிழங்கில் பல மருத்துவ குணங்களும் உள்ளன. இவை குளிர்ச்சி தன்மை உடையது. மலச்சிக்கலை தீர்க்கக்கூடியது. இதிலுள்ள இரும்புச்சத்து உடலுக்கு வலு சேர்க்கும். நார்ச்சத்து அதிகம் இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பனங்கிழங்கு வாயுத்தொல்லை உடையது. எனவே அதனுடன் பூண்டு, மிளகு, உப்பு சேர்த்து இடித்து மாவாக்கி சாப்பிடலாம்.

error: Content is protected !!