News April 15, 2025

உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

image

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

Similar News

News December 31, 2025

அதிமுக – பாஜக கூட்டணி.. பிரச்னை வெடித்தது

image

TN-ல் NDA கூட்டணி வென்றால், பாஜக ஆட்சியில் அங்கம் வகிக்குமா என்பதை டெல்லி தலைமைதான் முடிவு செய்யும் என ஹெச்.ராஜா பேசியுள்ளார். முன்னதாக, ’கூட்டணி ஆட்சி’ முழக்கத்தால் அதிமுக-பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. இது சமீபகாலமாக இல்லாமல் இருந்த நிலையில் தற்போது அதை மீண்டும் ஹெச்.ராஜா தொடங்கி வைத்திருக்கிறார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியில் மீண்டும் பிரச்னை வெடிக்கலாம் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 31, 2025

ஒரே ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு.. ₹80,915 கோடி நஷ்டம்!

image

தலைப்பை படித்ததும் நம்ப முடியவில்லையா? உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலை 2022-ல் ‘insane’ என கண்டித்தார் ரஷ்யாவின் Tinkoff வங்கியின் நிறுவனர் ஒலெக் டின்கோவ். அந்த ஒரே பதிவு அவரின் வாழ்க்கையை புரட்டிப் போட்டது. பங்குகளை விற்காவிட்டால் வங்கி தேசியமயமாக்கப்படும் என ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்ததாக கூறப்பட்ட நிலையில், அவர் தனது 35% பங்குகளை விற்றுள்ளார். இதன் காரணமாக, அவர் ₹80,915 கோடியை இழந்துள்ளார்.

News December 31, 2025

புத்தாண்டு முதலே சமத்துவம் பொங்கட்டும்: CM

image

தமிழக மக்களின் நம்பிக்கை மிகுந்த புத்தாண்டாக 2026 அமையும் என்று CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஒரு கையில் வாளேந்தி உரிமை காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும், ஜனநாயக போர்க்களத்தில் நிற்கும் நமக்கு வெற்றி ஒளிவீசும் ஆண்டாக இது இருக்கும் என்று அவர் கூறியுள்ளார். புத்தாண்டு தொடக்கம் முதலே சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!