News April 15, 2025

உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

image

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

Similar News

News January 1, 2026

திமுகவுக்கு பெரும் நிம்மதி

image

பிரவீன் சக்ரவர்த்தி கிளப்பிய சர்ச்சையால் DMK-CONG கூட்டணியில் பிளவு ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருதினர். காங்., தவெக இடையே பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், செல்வப்பெருந்தகை கூட்டணி வலுவாக இருப்பதாக சொல்லிவிட்டார். <<18722641>>ப. சிதம்பரமும் <<>>திமுகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை உறுதிப்படுத்தியுள்ளார். இதனால், திமுக தலைமை நிம்மதியடைந்துள்ளதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 1, 2026

பொங்கல் பரிசு… அரசு மகிழ்ச்சியான அறிவிப்பு

image

பொங்கல் தொகுப்புடன் ரொக்கப் பணம் வழங்க TN அரசு திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக ₹248 கோடி ஒதுக்கியுள்ள அரசு, 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி மற்றும் சர்க்கரை, ஒரு கரும்பு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதையடுத்து, ஒரு சில நாள்களில் ₹3,000 ரொக்கப் பணம் குறித்த அறிவிப்பையும் CM ஸ்டாலின் வெளியிடுவார் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News January 1, 2026

ஆபரேஷன் சிந்தூர்.. இந்தியா பெருமிதம்

image

பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ஆபரேஷன் சிந்தூர் ஒரு சிறந்த சான்று என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்த அறிக்கையில், இந்திய படைகள் திறம்பட செயல்பட்டு PAK-ன் தீவிரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியதாகவும் கூறப்பட்டுள்ளது. பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது என்ற செய்தியை உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சொல்லியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!