News April 15, 2025

உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

image

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.

Similar News

News December 25, 2025

தமிழகத்திற்கு ஜனவரியில் புதிய டிஜிபியா?

image

தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் கடந்த ஆக.31-ல் ஓய்வு பெற்றார். புதிய டிஜிபி நியமிக்கப்படாததால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சித்து வந்த நிலையில், பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில், ஜனவரியில் தமிழகத்திற்கு புதிய டிஜிபி நியமிக்கப்படுவார் எனக் கூறப்படுகிறது. இதில், மூத்த IPS அதிகாரி சீமா அகர்வாலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News December 25, 2025

தமிழர் என்றால் நாதகவுக்கு ஓட்டு போடுங்கள்: சீமான்

image

திராவிடம் என்பது தமிழன் அல்லாதவன் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஒன்று என சீமான் விமர்சித்துள்ளார். நாதக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தங்களை திராவிடர்கள் என்று எண்ணுகிறவர்கள் தனக்கு ஓட்டு போட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். அதேநேரம், தமிழர்கள் என்று எண்ணுகிற மக்கள் தனக்கு ஓட்டு போடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார். திராவிட கட்சிகளால் மக்களுக்கு பயனில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

News December 25, 2025

நன்மைகளை வாரி வழங்கும் அகத்திக்கீரை!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி, ➤அகத்திக் கீரையுடன் அரிசி கழுவிய நீரை கலந்து சூப் வைத்து சாப்பிட்டால் இதயம், மூளை, கல்லீரல் வலிமை பெறும். ➤அகத்திக் கீரையை ஆவியில் வேக வைத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சாப்பிட்டால் வயிற்றுவலி குணமாகும். ➤அகத்தி கீரையால் உடல் குளிர்ச்சி அடையும், பற்கள் உறுதிபெறும். ➤நோயெதிர்ப்பு சக்தி கூடுவதுடன் உடல் வலுப்பெறும். SHARE IT.

error: Content is protected !!