News April 15, 2025
உச்சத்தில் பங்குச் சந்தைகள்.. உற்சாகத்தில் முதலீட்டாளர்கள்!

தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வர்த்தகத்தை தொடங்கிய பங்குச் சந்தையின் நிலவரம் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. சென்செக்ஸ் 1,595 புள்ளிகள் அதிகரித்து 76,753 புள்ளிகளிலும், நிப்டி 494 புள்ளிகள் அதிகரித்து 23,324 புள்ளிகளிலும் வர்த்தகமாகி வருகின்றன. டாடா மோட்டார்ஸ், ஸ்ரீராம் பைனான்ஸ், மகிந்திரா, HDFC வங்கி உள்ளிட்ட பங்குகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளன.
Similar News
News September 19, 2025
நேதாஜி பொன்மொழிகள்

*சரித்திரம் வலிமையனாது. இதில் பதிவாகும் ஒவ்வொரு மகத்தான மாற்றமும் எளிதானவை அல்ல. *தன்னை மாற்றுவதற்கு தயாராக இருப்பவனே உலகத்தை மாற்றுவதற்கு தகுதியனாவன். * உண்மையான நண்பனாக இரு, இல்லாவிட்டால் உண்மையான பகைவனாக இரு. துரோகியாகவோ அரை நம்பிக்கை உடையவனாக இருக்காதே. * ஒருவொருக்கு ஒருவர் விட்டு கொடுக்காது போனால் அரை நிமிடங்கள் கூட இவ்வுலகத்தில் நாம் வாழ்வை நடத்த முடியாது.
News September 19, 2025
என்ன பண்றது எனக்கே கஷ்டமா தான் இருக்கு!

ஹிமாச்சலில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளை பார்வையிட பாஜக MP கங்கனா ரனாவத் சென்றார். அவரை சூழ்ந்த பொதுமக்கள், வெள்ளத்தால் தங்களது உடமைகளை இழந்தது குறித்து வேதனையுடன் தெரிவித்தனர். அப்போது, என்ன செய்ய, மணலியில் உள்ள எனது ஹோட்டலில் நேற்று ₹50-க்கு தான் வியாபாரம் நடந்தது, ஆனால் ஊழியர்களுக்கு ₹15 லட்சம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்ற தன்னுடைய கஷ்டங்களை புலம்ப ஆரம்பித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
News September 19, 2025
இந்தியா, சீனாவிடம் டிரம்பின் பாட்சா பலிக்காது: ரஷ்யா

சீனா, இந்தியாவை மிரட்டி பணிய வைக்கலாம் என டிரம்ப் நினைத்தால், அது நடக்காது என ரஷ்ய அமைச்சர் செர்ஜி லவ்ரோ தெரிவித்துள்ளார். இரு நாடுகளும் பழங்காலம் முதலே சிறந்து விளங்கிய நாகரீகங்கள் எனவும், அவர்களிடம் போய் இதை செய், அதை செய், இல்லையென்றால் வரிவிதிப்பேன் என்று சொல்வது நகைப்புக்குரியதாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் வரிவிதிப்புகளால் மிரட்டி வரும் நிலையில் அவர் இவ்வாறு சாடியுள்ளார்.