News March 18, 2025
விறுவிறுவென உயரும் பங்குச்சந்தை

கடந்த சில மாதங்களாக சரிவில் இருந்த இந்திய பங்குச்சந்தைகள், இன்று மீண்டு எழுந்துள்ளன. இன்று காலை வர்த்தக நேரம் தொடங்கியவுடன், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 173 புள்ளிகள் உயர்ந்து, 22,682க்கு வர்த்தகம் ஆகிறது. சென்செக்ஸ் 500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. தனியார் வங்கிகளின் பங்குகள் இன்று நல்ல ஏற்றத்தை கண்டுள்ளன. பஜாஜ் நிதி நிறுவனங்கள் இன்று சரிவை சந்தித்துள்ளன.
Similar News
News March 18, 2025
இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (1/2)

1947இல் பிரிட்டிஷார் சுதந்திரம் அளிக்கும் முன்பு, நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என 2 நாடுகளாக பிரித்தனர். அப்போது 1947 ஆகஸ்ட் 14இல் பிரிட்டிஷ் இந்திய ராணுவம் கலைக்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்திய ராணுவ வீரர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் என விரும்பிய பக்கம் சேர வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது இந்திய ராணுவத்தின் பக்கம் 2.60 லட்சம் வீரர்களும், பாகிஸ்தான் பக்கம் 1.31 லட்சம் வீரர்களும் சேர்ந்தனர்.
News March 18, 2025
இந்தியா, பாகிஸ்தான் ராணுவம் உருவான கதை (2/2)

கூர்க்கா படையை சரிபாதியாக இந்தியாவும், பிரிட்டனும் தங்களுக்குள் பிரித்து கொண்டன. பிரிட்டிஷ் விமானப்படையில் இருந்த 10,000 பேர் இந்திய விமானப்படையிலும், 3,000 பேர் பாகிஸ்தான் விமானப்படையிலும், பிரிட்டிஷ் கடற்படையில் இருந்த 8,700 பேரில் 5,700 பேர் இந்திய கடற்படையிலும், எஞ்சிய 3,000 பேர் பாகிஸ்தான் கடற்படையிலும் இணைந்தனர். இவை அனைத்தும் பிரிட்டிஷ் ராணுவம் மேற்பார்வையில் நடந்து முடிந்தது.
News March 18, 2025
சிறுமியை ரேப் செய்து கொன்ற கொடூர தந்தை கைது

7 வயது சிறுமிக்கு எமனாக மாறிய கொடூர தந்தை பற்றிய செய்தி இது. உ.பி. காசியாபாத்தில் உணவு ஒவ்வாமையால் சிறுமி உயிரிழந்ததாக சொல்லப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவள் ரேப் செய்யப்பட்டது தெரியவந்தது. இந்த கொடுமையை செய்தது சிறுமியின் தந்தை என்பதுதான் கொடூரத்தின் உச்சம். ஹோலி பண்டிகையன்று போதையில் இருந்த அவர், சிறுமியை ரேப் செய்துள்ளார். அப்போது, அவள் அலறியதால் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்துள்ளது.