News June 4, 2024

₹36 லட்சம் கோடியை இழந்த பங்குச்சந்தை

image

இந்திய பங்குச்சந்தைகள் தேர்தல் முடிவுகள் காரணமாக இன்று கடுமையான சரிவை சந்தித்தன. இதனால், சுமார் ₹36 லட்சம் கோடி மதிப்பினை இந்திய பங்குச்சந்தைகள் இழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. வர்த்தக நேர முடிவில் தேசிய பங்குச்சந்தைகள் நிஃப்டி 1,379 புள்ளிகளை இழந்து 21,884 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. சென்செக்ஸ் 4,389 புள்ளிகளை இழந்து 72,079க்கு வர்த்தகத்தை நிறைவடைந்தது.

Similar News

News April 3, 2026

குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது தாக்குதல்

image

தங்களது கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் & எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக குவைத் தெரிவித்துள்ளது. ஆனால், ஈரான் இதனை மறுத்ததுடன், இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக குற்றம்சாட்டியுள்ளது. அதேபோல் சவுதி, பஹ்ரைன், UAE உள்ளிட்ட நாடுகளிலும் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. குவைத்தில் தாக்கப்பட்ட ஆலை, மத்திய கிழக்கிலேயே மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஆகும்.

News April 3, 2026

BREAKING: திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

image

வேலூர் திமுகவின் முக்கிய முகங்களில் ஒருவராக விளங்கிய முன்னாள் மா.செ., ப.சண்முகத்தின் மகன் ப.ச.சுரேஷ் அண்மையில் திமுகவில் இருந்து விலகினார். மாதனூர் ஒன்றியச் சேர்மனான அவர், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி ஏற்பாட்டில் EPS முன்னிலையில் அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார். பூங்கொத்து கொடுத்து சுரேஷை வரவேற்ற EPS, வேலூர் மாவட்ட தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

News April 3, 2026

ஏன் தண்டவாளங்கள் துரு பிடிப்பதே இல்லை தெரியுமா?

image

மழையில் நனைந்தாலும், ஏன் ரயில் தண்டவாளங்கள் துரு பிடிப்பதில்லை தெரியுமா? ✦சிறப்பு கலவையால் உருவாக்கப்படும் ‘C-Mn ரயில் எஃகு’ தான் தண்டவாளங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில், 1% கார்பன், 12% மாங்கனீசு சேர்க்கப்படுகிறது. இது துரு பிடிப்பதை குறைக்கிறது ✦ரயில்கள் ஓடிக் கொண்டே இருப்பதால், தண்டவாள மேற்பரப்பு மெருகேறிக்கொண்டே இருக்கும். இதனால், தண்டவாளத்தின் மேற்பரப்பில் ஈரப்பதம் ஒட்டாது.

error: Content is protected !!