News July 7, 2025
பெரிய மாற்றமின்றி முடிவடைந்த பங்குச்சந்தை

வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தை பெரிய மாற்றமின்றி முடிவடைந்துள்ளது. அதன்படி சென்செக்ஸ் 9.61 புள்ளிகள் உயர்ந்து 83,442.50 புள்ளிகளுடன் வர்த்தகம் நிறைவடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி 0.30 புள்ளிகள் உயர்ந்து 25,461.30 புள்ளிகளுடன் வர்த்தகம் முடிந்துள்ளது. பெரிய ஏற்றத்தாழ்வு இன்றி பங்குச்சந்தை வர்த்தகம் நிறைவுபெற்றுள்ளது.
Similar News
News July 8, 2025
லாரா சாதனையை உடைக்க விரும்பவில்லை: முல்டர்

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்க கேப்டன் வியான் முல்டர் 367 ரன்களை குவித்து பிரம்மிக்க வைத்தார். உண்மையில் அவரால் பிரையன் லாரா அடித்த 400 ரன்களை கடந்து உலக சாதனை படைத்திருக்க முடியும். ஆனால் அவர் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தார். மேலும் லாரா போன்ற லெஜண்டின் சாதனை, வரலாற்றில் என்றும் நிலைத்திருக்க வேண்டும் என்பதால் டிக்ளேர் செய்ததாக முல்டர் தெரிவித்துள்ளார். யார் சாமி இவன்?
News July 8, 2025
WARNING: டாய்லெட்டில் போன் பயன்படுத்துவீர்களா?

*கழிப்பறை சீட், குழாய், கைப்பிடி மீதுள்ள கிருமிகள் செல்போனில் ஒட்டிக்கொள்ளும் *இதனால் UTI, வயிற்றுப்போக்கு பாதிப்புகள் ஏற்படலாம் *போனில் தொற்றும் கிருமி, குழந்தைகளுக்கும் தொற்றலாம் *20-30 mins போன் பார்த்துக் கொண்டிருந்தால் மலம் கழித்தலில் பிரச்சனை ஏற்படும் *மலச்சிக்கல் ஏற்படும் *மூலம் ஏற்படும் ஆபத்து *உங்கள் நேரம் வீணாகும் *போன் தவறி டாய்லெட்டில் விழலாம் *மேலும், போனுக்கும் அடிமையாவீர்கள்.
News July 8, 2025
நாளைய முதல்வர் இபிஎஸ்… மேடையில் பேசிய நயினார்!

கூட்டணி ஆட்சியா? தனிப்பெரும்பான்மை ஆட்சியா? என்ற கோணத்தில் அதிமுக – பாஜக கூட்டணிக்குள் குழப்பம் இருந்தது. கோவையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இபிஎஸ், பாஜக தலைவர்கள் முன்னிலையிலேயே அதிமுக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் எனக் கூறினார். இதனை வரவேற்கும் விதமாக, நாளைய முதல்வர் இபிஎஸ் என நயினார் நாகேந்திரனும் பேசி இருக்கிறார். திடீர் திருப்பமாக பிரச்னை சீக்கிரமே முடிவுக்கு வந்திருக்கிறது.