News April 10, 2024
உச்சத்தில் பங்குச்சந்தை

பங்குச்சந்தை புதிய உச்சத்தை நோக்கி வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 251 புள்ளிகள் அதிகரித்து 74,931 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 68 புள்ளிகள் அதிகரித்து 22,713 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. Indian Oil Corp, TVS உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.
Similar News
News November 7, 2025
கடத்தல் வழக்கு: போலீஸுக்கு அன்புமணி கண்டனம்

தமிழகத்தில் <<18226171>>பெண்களுக்கு எதிரான குற்றங்கள்<<>> அதிகரிக்கும் நிலையில், திமுகவை எந்த கொம்பனாலும் தொட முடியாது என CM ஸ்டாலின் வீர வசனம் பேசி கொண்டிருப்பதாக அன்புமணி விமர்சித்துள்ளார். மேலும், பெண்ணை மீட்க வேண்டிய போலீஸ், கடத்தல் தொடர்பாக புகார் எதுவும் வரவில்லை என கூறுவது பொறுப்பற்ற பதில் எனவும் சாடியுள்ளார். எவரேனும் புகார் அளித்தால்தான் போலீஸ் நடவடிக்கை எடுக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
News November 7, 2025
BREAKING: இலவச பட்டா… தமிழக அரசு புதிய அறிவிப்பு

TN-ல் முதல்முறையாக உபரி நிலத்தில் வீட்டுமனை பட்டா வழங்க CM ஸ்டாலின் அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். ஒட்டன்சத்திரத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டத்திற்கு உபரி நிலத்தில் இலவச வீட்டுமனை பட்டா தர அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். முதல்கட்டமாக 500-க்கும் மேற்பட்டோர் பயனடைந்திருப்பதாகவும், இது TN முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
News November 7, 2025
₹4 லட்சம் ஜீவனாம்சம் போதாது: ஷமி EX மனைவி

ஷமி மாதாமாதம் கொடுக்கும் ₹4 லட்சம் ஜீவனாம்சத்தை உயர்த்தி கொடுக்க வலியுறுத்தி, அவரது EX மனைவி ஹசின் ஜஹான் SC-ல் மனுத்தாக்கல் செய்துள்ளார். கோடிகளில் சம்பாதிக்கும் ஷமி, சிறு தொகையையே ஜீவனாம்சமாக வழங்குவதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை விசாரித்த கோர்ட், ₹4 லட்சம் பெரிய தொகை இல்லையா என கேள்வி எழுப்பினாலும், இது குறித்து விளக்கம் அளிக்க ஷமி, மே.வங்க அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.


