News March 27, 2024

உச்சத்தில் பங்குச்சந்தை

image

வாரத்தின் மூன்றாவது நாளான இன்று பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 360 புள்ளிகள் உயர்ந்து 72,832 புள்ளிகளாகவும், தேசிய குறியீட்டு எண் நிஃப்டி 107 புள்ளி உயர்ந்து 22,112 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. LIC உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.

Similar News

News January 15, 2026

இன்று ஜல்லிக்கட்டில் இதை செய்தால் ₹2 லட்சம் பரிசு

image

அவனியாபுரத்தில் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரு காளையை அடக்கினால் ₹2 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ‘தோட்டா’ என்ற அந்த காளையை அடக்கும் காளையருக்கு இந்த பரிசு கிடைக்கும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச் சங்க மாநிலத் தலைவர் முடக்கத்தான் மணி இதனை அறிவித்துள்ளார். இதனால், வாடிவாசலில் துள்ளி வரும் காளையை அடக்க காளையர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

News January 15, 2026

சற்றுமுன்: விஜய்யின் அடுத்த மெகா சம்பவம்!

image

ஈரோட்டில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தி முடித்த விஜய், அடுத்ததாக எந்த பகுதியில் மக்களை சந்திக்க உள்ளார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், EPS கோட்டையாக கருதப்படும் சேலத்தில்தான் அடுத்த மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெறும் என அம்மாவட்ட செயலாளர் பார்த்திபன் தெரிவித்துள்ளார். பொங்கல் முடிந்ததும் தமிழ்நாடே திரும்பி பார்க்கும் அளவிற்கு கூட்டம் நடத்தப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

News January 15, 2026

பொங்கலன்று இந்த தவறுகளை மட்டும் செஞ்சிடாதீங்க!

image

தைப்பொங்கல் திருநாளான இன்று, இந்த தவறுகளை மட்டும் கண்டிப்பாக செஞ்சிடாதீங்க *ஒற்றைப் பானையில் பொங்கல் வைக்கக்கூடாது. பால் பொங்கல், சர்க்கரை பொங்கல் என 2 பொங்கல் வைக்க வேண்டும் *தேவைக்கு அதிகமாக பொங்கல் செய்து அதனை குப்பையில் போடக்கூடாது *அசைவம் சாப்பிட வேண்டாம் *பொங்கல் பானையை அடுப்பில் வைக்கும் போது வெறும் பானையாக வைக்கக் கூடாது. கொஞ்சம் பாலும் தண்ணீரும் ஊற்றி அடுப்பில் வைக்கலாம். SHARE IT.

error: Content is protected !!