News June 26, 2024
வரலாற்று உச்சத்தில் பங்குச்சந்தை

இந்திய பங்குச்சந்தை இன்று வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலையில் வர்த்தகம் தொடங்கியதில் இருந்து பங்குச்சந்தை நல்ல முன்னேற்றத்தை கண்டன. குறிப்பாக, மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 453 புள்ளிகள் உயர்ந்து 78,509 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 110 புள்ளிகள் உயர்ந்து 23,832 புள்ளிகளுடனும் வர்த்தகமாகி வருகிறது.
Similar News
News October 24, 2025
அழகின் தீயில் வாட்டும் ரகுல் ப்ரீத் சிங்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரகுல் ப்ரீத் சிங் திருமணத்துக்கு பின் பெரிதாக படங்களில் தலை காட்டவில்லை. ஆனாலும் விட்ட இடத்தை பிடிக்க வேண்டும் என கவர்ச்சியில் ஆளை சாய்க்கும் போட்டோஸை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரகுல் ப்ரீத் சிங் அழகில் மயங்கிய இளசுகள் ஹார்ட்டின்களை பறக்கவிடுகின்றனர். அவரது அழகை ஆராதிக்க மேலே உள்ள போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
News October 24, 2025
திமுக, விசிக கூட்டணியில் விரிசல் இல்லை: திருமாவளவன்

தமிழக அரசியல் களம் ‘திமுக vs அதிமுக’ என்ற பாரம்பரிய வடிவத்திலேயே நீடிப்பது தான் ஆரோக்கியமானது என திருமாவளவன் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் தமிழகத்தில் 2-வது பெரிய கட்சியாக உருவெடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் இலக்கு என்றும், அது தெரியாமல் அதிமுக பாஜகவுடன் உறவாடுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும் திமுக, விசிகவுக்கு இடையில் எந்த விரிசலும் இல்லை என்றும் திருமாவளவன் தெளிவுபடுத்தினார்.
News October 24, 2025
வீட்டில் தங்கம் சேர இன்று இந்த வழிபாட்டை பண்ணுங்க!

வெள்ளிக்கிழமை அன்று காலை வீட்டை சுத்தம் செய்து, விளக்கு ஏற்றி லட்சுமியை வழிபட்டு விட்டு, மாலையில் லட்சுமி தேவிக்கு தாமரை மலர் கொண்டு வழிபட வேண்டும். மேலும், மஞ்சள், குங்குமம், இனிப்பு நைவேத்தியம் படைத்து முழு மனதுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். தொடர்ந்து 3 வெள்ளிக்கிழமைகள் இப்படி வழிபடுவதால், லட்சுமி தேவியின் அருள் கிடைத்து, வீட்டில் லட்சுமி கடாட்சம் கூடி, செல்வம் பெருகும் என நம்பப்படுகிறது.


