News February 9, 2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த ஸ்டீவ் ஸ்மித்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739068409440_1231-normal-WIFI.webp)
ஆஸி.யின் ஸ்மித் உலக கிரிக்கெட்டில் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 11 வீரர்களுடன் பார்ட்னர்ஷிப்பில் 200 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர், ரிக்கி பாண்டிங் 10 பேருடன் 200+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார். மேலும், ஆஸி. அணிக்காக அதிக சதங்களை அடித்த வீரர் என்ற ரிக்கி பாண்டிங்(41) சாதனையையும் ஸ்மித்(36) நெருங்கி வருகிறார்.
Similar News
News February 10, 2025
தினமும் ஒரு பொன்மொழி!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739122458354_785-normal-WIFI.webp)
✍சட்டப்பூர்வமாக சரியான சில விஷயங்கள், நியாய ரீதியாக பார்த்தால் சரியானவை அல்ல.✍எதிரிகளை அழிப்பதற்கான சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்குவதுதான்.✍ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது.✍உதவி செய்யும் இதயம் இருப்பவனுக்கே, விமர்சிக்க உரிமை உண்டு.✍எல்லோரையும் நம்புவது பயங்கரமானது; யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது.✍ ஏமாற்றுவதைக் காட்டிலும், தோற்றுப்போவது மரியாதைக்குரியது – ஆபிரகாம் லிங்கன்.
News February 10, 2025
மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார் PM மோடி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739139344709_785-normal-WIFI.webp)
தேர்வு எழுத உள்ள மாணவர்களை PM மோடி நேரடியாக சந்தித்து கலந்துரையாடும் பரிக்ஷா பே சர்ச்சா என்ற நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெற உள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்வின் 8வது ஆண்டு நிகழ்ச்சி இந்தாண்டு 8 பிரிவுகளாக நடத்தப்படுகிறது. தேர்வை எதிர்கொள்வது எப்படி, தேர்வு பயத்தை போக்குவது, கனவுகளை நினைவாக்க ஊக்குவிப்பது உள்ளிட்ட வகையில், 2,500 மாணவர்களுடன் மோடி கலந்துரையாட உள்ளார்.
News February 10, 2025
உங்கள் குழந்தைகளுக்கு போன் கொடுக்கிறீர்களா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739125999512_785-normal-WIFI.webp)
குழந்தைகள் அழுகையை நிறுத்த செல்போனைக் கொடுக்கிறீர்களா? அப்படியானால், நீங்கள் அவர்களுக்கு தீங்கு செய்கிறீர்கள். குழந்தைகள் 6 மாதத்திலிருந்து தங்களைச் சுற்றியுள்ள சூழலைப் பார்த்து பேசக் கற்றுக்கொள்கிறார்கள். இவ்வயதில் அவர்களிடம் போன் கொடுப்பதால், 3 வயது வரை பேச முடியாமல் போகும் அபாயம் உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். எதிர்காலத்தில் ஆட்டிசம் போன்ற பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கின்றனர்.