News February 16, 2025
உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 29, 2025
இந்தியாவில் BTS Concert! எங்கே தெரியுமா?

கொரியன் பாப் இசையை உலகளவில் பிரபலமாக்கிய ‘BTS’ குழு இந்தியாவில் கான்சர்ட் நடத்த திட்டமிட்டுள்ளது. 2026-ம் ஆண்டின் தொடக்கத்தில் மும்பையில் இந்த கான்சர்ட்டை நடத்த அதன் நிர்வாகக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் கசிந்துள்ளது. அடுத்த ஆண்டில் இந்தியா மட்டுமல்லாமல், உலகின் பல்வேறு இடங்களில் சுமார் 60 கான்சர்ட்டுகளை நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. நீங்கள் கொரியன் பாப் இசையை கேட்டிருக்கீங்களா?
News December 29, 2025
விஜய்யை விசாரிக்க சிபிஐ திட்டம்?

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொ.செ., புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அவர்கள் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர். இதனிடையே, விஜய்யிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு அதற்கான கேள்விகளை CBI இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.
News December 29, 2025
2025-ல் கிங் கோலி படைத்த சாதனைகள்!

இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி வழக்கம் போல, இந்த ஆண்டும் பல ரெக்கார்டுகளை படைத்துள்ளார் ✦அதிவேகமாக 14,000 ODI ரன்களை கடந்த வீரர் ✦ICC Knock-out போட்டிகளில் 1,000 ரன்களை விளாசிய ஒரே வீரர் ✦சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் (ODI-ல் 52 சதங்கள்) போன்ற பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக RCB ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.


