News February 16, 2025

உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

image

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 17, 2025

குச்சி காளானில் இவ்வளவு நன்மைகளா?

image

சமீபத்தில் அதிபர் புடின், இந்தியா வந்திருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட விருந்தில் குச்சி காளானும் இடம்பெற்றிருந்தது. சாதாரண காளான் கிலோ ₹200-க்கு விற்கப்படும் நிலையில், குச்சி காளானின் விலை கிலோ ₹6,000 ஆகும். ஏனெனில், இந்த அரிய வகை குச்சி காளானில் பல சத்துகள் உள்ளன. குச்சி காளான் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

News December 17, 2025

யாருடன் கூட்டணி? ராமதாஸ் முக்கிய ஆலோசனை

image

விழுப்புரம், தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் பாமக மாநில நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் 2026 சட்டமன்ற தேர்தல், கூட்டணி, கட்சியின் அடுத்தக்கட்ட செயல்பாடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில் GK மணி, அருள் MLA உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். சாதிவாரி கணக்கெடுப்பு கோரி இன்று அன்புமணி போராட்டம் நடத்தும் நிலையில், ராமதாஸ் தலைமையில் நடக்கும் நிர்வாகக் குழு கூட்டம் கவனம் பெறுகிறது.

News December 17, 2025

பள்ளியில் மாணவர் மரணம்.. நேரில் விரையும் அமைச்சர்?

image

திருவள்ளூர், கொண்டாபுரம் அரசு பள்ளியில் சுவர் இடிந்து விழுந்து <<18580609>>மாணவன் <<>>உயிரிழந்தது மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்நிலையில், மாணவனின் உடலை வாங்க மறுப்பு தெரிவித்து, பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி மற்றும் ₹1 கோடி நிவாரண நிதி கோரி போராட்டம் நடைபெறுகிறது. இதனால், சமாதான பேச்சுவார்த்தை நடத்த அமைச்சர் அன்பில் நேரில் செல்லவுள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!