News February 16, 2025
உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 26, 2025
விஜய்யுடன் பணியாற்றுவது கொடுப்பினை: KAS

நான் சேர்ந்த இடம் (தவெக), கோட்டைக்கு செல்கிற இடம் என செங்கோட்டையன் கூறியுள்ளார். விஜய் தன்னிடம் மனம் திறந்து பேசியதாக கூறிய அவர், இப்படிப்பட்ட தலைவரோடு பணியாற்ற, தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும் எனவும் புகழ்ந்தார். மேலும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவோடு பணியாற்றிய தனக்கு, தற்போது அடுத்த தலைமுறை தலைவரான விஜய்யுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 26, 2025
வங்கி கணக்கில் ₹2,000.. அரசு புதிய அறிவிப்பு

நலிவடைந்த விவசாயிகளுக்கு PM KISAN திட்டத்தில் மத்திய அரசு ஆண்டுக்கு 3 தவணைகளாக தலா ₹2,000 வழங்கி வருகிறது. அடுத்த தவணை 2026 பிப்ரவரியில் டெபாசிட் செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த திட்டத்தில் பயன்பெற விவசாய அடையாள எண்ணை பதிவு செய்யுமாறு தமிழக விவசாயிகளுக்கு மாவட்ட வாரியாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆதார் அட்டை, நில உரிமை ஆவணங்களுடன் தோட்டக்கலை துறையில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
News December 26, 2025
56 பந்துகளில் சதம் அடித்து மிரட்டிய ரிங்கு சிங்

விஜய் ஹசாரே தொடரில் கேப்டன் ரிங்கு சிங்கின் மரண அடியால் உ.பி. அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் சண்டிகரை வீழ்த்தியுள்ளது. 5-வது வீரராக களமிறங்கிய ரிங்கு சிங் 60 பந்துகளில், 11 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் உள்பட 106 ரன்கள் குவித்து சண்டிகர் பவுலர்களை திக்குமுக்காட வைத்தார். இதனையடுத்து 367 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி விளையாடிய சண்டிகர் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.


