News February 16, 2025
உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 13, 2025
கூட்டணிக்கு அழைப்பு விடுத்தார் செங்கோட்டையன்

2026 தேர்தலில் விஜய் தலைமையில் கூட்டணி அமைக்கும் பணிகளை தவெக முடுக்கிவிட்டுள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைக்கான சிறப்புக் குழு நேற்று அமைக்கப்பட்ட நிலையில், விஜய்யை CM வேட்பாளராக ஏற்பவர்கள் கூட்டணிக்கு வரலாம் என செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார். பாமக, தேமுதிக, அமமுக உள்ளிட்டவை தற்போதுவரை கூட்டணியை உறுதி செய்யவில்லை. அக்கட்சிகளை இழுக்க காய் நகர்த்தி வருவதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News December 13, 2025
மக்கள் நாயகன் காலமானார்.. கண்ணீருடன் இரங்கல்

கிளிகளுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த <<18542461>>’பறவை மனிதர்’<<>> ஜோசப் சேகரின் மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த இந்த மாமனிதரின் இறுதிக்காலம் மகிழ்ச்சியாக அமையவில்லை. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜோசப் சேகர், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு காலமானார். அவரது இழப்புக்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்ணீர் மல்க இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News December 13, 2025
ICC போட்டிகள் ஜியோஸ்டாரில் ஒளிபரப்பாகும்

இந்தியாவில், ICC போட்டிகளை ஒளிபரப்புவதற்கு போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து JioStar வெளியேறவில்லை என ICC தெரிவித்துள்ளது. $3 பில்லியன் நிதியிழப்பால், 2027 வரை போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருந்து Jiostar வெளியேறுவதாக தகவல் கசிந்தது. இது உண்மையல்ல என்றும், இந்தியாவில் ஐசிசி போட்டிகளை ஒளிபரப்புவதில் Jiostar உறுதியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால், Jiostar வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


