News February 16, 2025
உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
புத்தாண்டு ராசிபலன் 2026: ரிஷபம்

லாப ஸ்தானத்தில் சனி, தன ஸ்தானத்தில் குரு உள்ள நிலையில் புத்தாண்டு பிறப்பதால், நீண்ட கால வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளில் இறங்குவீர்கள் *வாழ்க்கை துணையின் உடல், மனநலனில் அக்கறை கொள்ளுங்கள் *தேவையற்ற கடன்களை வாங்கி சிக்கலில் மாட்டிக்கொள்ளாதீர்கள் *உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும் *வெளிநாடு சென்று பயிலும் கனவு கைகூடும் *ஆரோக்கியத்தில் கவனம் தேவை *நீண்ட நாள் நினைத்த விருப்பங்கள் நிறைவேறும்.
News December 28, 2025
உதயநிதியால் 8 திமுக அமைச்சர்களுக்கு சிக்கலா?

தேர்தலில் இளைஞர்களை களமிறக்க துடிக்கும் உதயநிதியின் முடிவால் சிட்டிங் அமைச்சர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. வயது அடிப்படையில் 5 அமைச்சர்களுக்கும், கட்சியில் நிலவும் உள்ளடி மோதல்களால் மூவருக்கும் சீட் மறுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இந்த லிஸ்டில் இருக்கும் அமைச்சர்கள் திமுக தலைமையிடம் கோரிக்கை வைத்தாலும் காரியம் ஆகவில்லை என உள்விவரம் அறிந்தவர்கள் சொல்கின்றனர். அந்த 8 பேர் யாராக இருக்கும்?
News December 28, 2025
சமூகநீதி பேச திமுகவுக்கு தகுதியில்லை: அன்புமணி

தமிழகத்தில் என்ன நடக்கிறது என CM ஸ்டாலினுக்கே தெரியவில்லை என அன்புமணி சாடியுள்ளார். நாட்டில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக கூறிய அவர், TN-ல் தான் கனிமவளக் கொள்ளை அதிகமாக நடப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த CM மறுக்கிறார் எனவும், அதனால் திமுகவுக்கு சமூகநீதி பேசத் தகுதியில்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார்.


