News February 16, 2025

உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

image

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 30, 2025

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து கொலை

image

வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான வன்முறை அதிகரித்து வரும் நிலையில், மேலும் ஒரு இந்து நபர் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆடை தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்த பஜேந்திர பிஸ்வாஸை (42), சக காவலாளி நோமன் மியா (29) சுட்டுக் கொன்றார். இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, கவனக்குறைவால் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2 வாரங்களில் நடந்த 3-வது கொலை இதுவாகும்.

News December 30, 2025

நடிகை நந்தினி மரணம்… அதிர்ச்சித் தகவல்

image

நடிகை நந்தினியின் மரணத்தில் அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது. தற்கொலைக்கு முன் அவர் எழுதிய கடிதத்தில், குடும்ப பிரச்னையால் சோக முடிவை எடுப்பதாக அவர் குறிப்பிட்டிருந்தார். இதுகுறித்து போலீஸ் நடத்திய விசாரணையில், நடிப்பை கைவிடுமாறு அவரது தாய் வற்புறுத்தியதாகவும், அதனால் நந்தினி மனமுடைந்து இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால், துப்பட்டாவில் தூக்கு போட்டு அவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

News December 30, 2025

2025-ல் அதிகம் சொத்து சேர்த்தது இவர்கள் தான்!

image

2025-ம் ஆண்டு நாளையுடன் நிறைவடைய உள்ளது. இந்த ஆண்டில் பல தொழிலதிபர்கள் பல லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை சேர்த்துள்ள நிலையில், சிலர் பல லட்சம் கோடிகளை இழந்துள்ளனர். அந்த வகையில், 2025-ம் ஆண்டில் மட்டும் அதிகம் சொத்து சேர்த்த, இழந்த தொழிலதிபர்கள் தொடர்பான விவரங்களை மேலே தொகுத்துள்ளோம். அதை ஒவ்வொன்றாக Swipe செய்து பாருங்கள்.

error: Content is protected !!