News February 16, 2025
உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News January 2, 2026
RO-KO விளையாட அதிக ODI நடத்த வேண்டும்: பதான்

IND vs NZ இடையே 3 போட்டிகளைக் கொண்ட ODI தொடர், வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், 5 போட்டிகளை கொண்ட தொடரை ஏன் நடத்தக் கூடாது என இர்ஃபான் பதான் கேள்வி எழுப்பியுள்ளார். முத்தரப்பு, நான்கு தரப்பு ODI தொடர்களை நடத்தலாமே எனவும், RO-KO தொடர்ந்து விளையாட, அதிக ODI-களை BCCI நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்தியா கடைசியாக 2019-ல் 5 போட்டிகளைக் கொண்ட ODI தொடரில் விளையாடியது.
News January 2, 2026
‘பொங்கல் பரிசாக ₹5,000 வழங்குக’.. நயினார் அறிக்கை

பொங்கல் பரிசு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கலுக்கு ₹5,000 வழங்குவார்கள் என எதிர்பார்த்துவரும் நிலையில், மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை பரிசளித்துள்ளதாக சாடியுள்ளார். ஆட்சி முடியும் தருவாயிலாவது போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து, ₹5,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை சரிவர வழங்குமாறு CM ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். உங்க கருத்து?
News January 2, 2026
AI எங்கிருந்து தகவல்களை பெறுகிறது தெரியுமா?

AI என்பது மனிதர்களைப் போல சிந்தித்து செயல்படக் கூடிய கணினி தொழில்நுட்பமாகும். ஆனால் AI-க்கு மனிதர்களைப் போல நேரடியாக அனுபவமோ அல்லது உணர்வோ கிடையாது. அது செயல்படுவதற்குத் தேவையான தகவல்களை பல்வேறு தளங்களிலிருந்து பெறுகிறது. அவை என்னென்ன தளங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.


