News February 16, 2025

உயர்கல்வியில் AIஐ சேர்க்க நடவடிக்கை: ஜனாதிபதி

image

உயர்கல்வியில் செயற்கை நுண்ணறிவை (AI) ஒருங்கிணைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கூறியுள்ளார். ஜார்க்கண்டில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், AI போன்ற தொழில்நுட்பங்களால் எதிர்காலம் வியப்பை அளிக்கும் வகையில் இருக்கப் போவதாகவும், புதிதாக கொண்டுவரப்படும் பெரிய மாற்றங்கள் அனைவருக்கும் பயனளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 31, 2025

தூத்துக்குடி: அரசு அதிகாரி மர்ம மரணம்

image

ஆறுமுகநேரி பகுதியை சேர்ந்த கண்ணன் (55) குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்தார். இவருக்கு சொர்ணம் என்ற மனைவியும், பாலகிருத்திக் என்ற மகனும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், தனது தந்தையை பார்க்க பாலகிருத்திக் நேற்று வந்துள்ளார். அப்போது வீட்டில் கண்ணன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 31, 2025

விஜய் + காங்கிரஸ்.. கூட்டணி முடிவாகிறது

image

காங்கிரஸுக்கு 25 சீட்டுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்ற முடிவில் திமுக இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே கேட்பதை கொடுக்காவிட்டால் திமுக கூட்டணியில் காங்., நீடிக்குமா என்பது சந்தேகம்தான் என பேசப்பட்டது. இதனால் தவெக உடன் காங்., மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் இப்படியொரு தகவல் வெளியாகியுள்ளதால், தவெக-காங்., கூட்டணி முடிவாக வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News December 31, 2025

ரயில் பயணிகளுக்கு ஜாக்பாட்!

image

RailOne செயலியில் முன்பதிவில்லா டிக்கெட் பெறுவோருக்கு 3% தள்ளுபடி அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. செயலி மூலம் டிக்கெட் பெறுவதை ஊக்குவிக்கும் வகையில் ஜன.14 முதல் ஜூலை 14 வரை இச்சலுகை அமல்படுத்தப்பட உள்ளது. தற்போது RailOne செயலியில் R-wallet மூலம் டிக்கெட் பெற்றால் மட்டுமே 3% கேஷ்பேக் வழங்கப்படும் நிலையில், ​​UPI, டெபிட் கார்டு உள்ளிட்ட அனைத்து டிஜிட்டல் கட்டண முறைகளுக்கும் இனி தள்ளுபடி கிடைக்கும்.

error: Content is protected !!