News March 23, 2025
மெஹுல் சோக்சியை இந்தியா கொண்டு வர நடவடிக்கை

வங்கியில் ₹13,500 கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட தொழிலதிபர் மெஹுல் சோக்சியை நாடு கடத்த அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர் தனது மனைவியுடன் தற்போது பெல்ஜியமில் வசித்து வருகிறார். கடனை வாங்கிவிட்டு நாட்டைவிட்டு வெளியேறிய சோக்சி, கரிபீயன் தீவுகளில் வசித்ததாக நம்பப்பட்டது. மேலும், தற்போது பெல்ஜியத்தில் இருந்து ஸ்விட்சர்லாந்துக்கு செல்ல உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 24, 2025
CSKவை முதுகில் குத்திய வீரர்.. கேலி செய்த தங்கை

CSKவுக்கு 7 ஆண்டுகள் விளையாடிய தீபக் சாஹர் நடப்பு சீசனில் MIக்கு விளையாடி வருகிறார். நேற்றைய ஆட்டத்தில் 15 பந்துகளில் 28 ரன்கள் அடித்த சாஹர், முதல் ஓவரிலேயே ராகுல் திரிபாதியின் விக்கெட்டையும் வீழ்த்தினார். இந்நிலையில், பாகுபலி படத்தில், கட்டப்பா பாகுபலியை முதுகில் குத்தும் காட்சியின் புகைப்படத்தை, இன்ஸ்டாவில் போட்டு சாஹரை அவரது தங்கை கிண்டல் செய்துள்ளார்.
News March 24, 2025
பிரபல நடிகை Filiz Akın காலமானார்

துருக்கியை சேர்ந்த பழம்பெரும் நடிகை ஃபிலிஸ் அகின் (Filiz Akın ) 82 வயதில் உடல்நலக்குறைவால் காலமானார். 70களில் இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த அவரின் கண் அழகிற்கு மயங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இங்கு சில்க் ஸ்மிதாவை போல், அங்கு அவர் மிகவும் பிரபலம். நடிகர்கள் முதல் இயக்குநர்கள் வரை அவரின் கால் ஷீட்டுக்காக தவம் கிடந்துள்ளனர். ஆங்கிலம் உட்பட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
News March 24, 2025
பாய்ந்த மின்சாரம்! பரிதாபமாக போன உயிர்!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே திமுக கொடிக் கம்பம் அகற்றும்போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார். மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவின்படி பொது இடங்களில் உள்ள திமுக கொடிக் கம்பங்களை அகற்றுமாறு பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவுறுத்தியிருந்தார். அந்த வகையில் ஊத்தங்கரையில் கொடிக் கம்பம் அகற்றும்போது தான் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. மின்சாரம் தாக்கியதில் மேலும் 5 பேர் காயமடைந்தனர்.